Thazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்!
சென்னை: கற்பனைக்கும் எட்டாத சில கதைகளை இப்போதைய தொலைகாட்சி சீரியல்களில் நன்றாகவே கண்டு மகிழலாம். அப்படித்தான் இருக்கிறது விஜய் டிவியின் தாழம்பூ சீரியல்.
பூலோகம், நாகலோகம் என்று இரு உலகத்தின் முக்கியஸ்தர்களிடையே நடக்கும் போட்டி இது.அதாவது நாக உலகத்தில் பூஜை செய்துகொண்டு இருந்த நாக லிங்கம் பூலோகத்துக்கு எப்படியோ வந்துவிட்டது.
அதை மீண்டும் நாக லோகத்துக்கே கொண்டு வந்து நாகர்குல தலைவர் அதை பூஜை செய்ய வேண்டும். அதை கொண்டு வர பூலோகத்துக்கு நாகர் குலத்தை சேர்ந்த ஒருவர் செல்ல வேண்டும்.
தாழம்பூ சீரியல்
விஜய் டிவியின் தாழம்பூ சீரியலில் நாகலோகத்தில் இருக்கும் நாகர்குல மனிதர்கள் பாதி மனித உருவமாகவும், பாதி பாம்பு உடலாகவும் இருக்கின்றனர்.அங்கும் கதாநாயகன் கதாநாயகி என்று இருவர் உண்டு. இதில் வயதானவர் அந்த நாயகன் பூலோகம் செல்லும் காலம் நெருங்கி வருவதாக சொல்கிறார்.
ரேவதி பூலோகத்தில்
ரேவதி வீட்டில் இந்த நாகலிங்கம் இருக்கிறது.இதை பூஜை செய்ய ரேவதிக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ரேவதி வீட்டில் தாத்தா முதற்கொண்டு பலரும் இருந்தாலும் அவர்களுக்கு நாகலிங்கத்தை பூஜை செய்ய அனுமதி இல்லை.அதனால், ரேவதியை கல்யாணம் செய்துகொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.
ராஜகுமாரன் வருவான்
ரேவதிக்கு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளைப் பிடிக்கலை.தனக்கென்று ஒரு ராஜகுமாரன் வருவான் என்று தோழியிடம் கூறுகிறாள். அப்படித்தான் நாக லோகத்தில் இருந்து அழகிய ஒருவன் வந்து இவளை பின் தொடருகிறான். இவனுக்கு நாகலோகத்திலும் ஒரு காதலி இருக்கிறாள்.
கதையின் போக்கு
கதையின் போக்கு இப்படி நம்ப முடியாத அளவுக்கு இருப்பதால், சீரியலின் ஆரம்பத்தில் ஒரு ஸ்லைட் இதில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் கற்பனையே ..கதையும் கற்பனையில் பின்னப்பட்டதே என்று.அதே போல முதல் விளம்பர இடைவெளியின் போதும் பண்டைய காலத்தில் இருந்தே இது போன்ற கற்பனைக்கு கதைகள் விரும்பி பெரியவர்காளால் சொல்லப்பட்டு வருகின்றது. அந்த கற்பனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முழுக்க முழுக்க கற்பனையான கதையே இது என்று ஸ்லைட் போட்டு காண்பிக்கிறார்கள்.