Thazhampoo Serial: அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் ஓடுங்கள்!
சென்னை: விஜய் டிவியில் உலகைத் தேடி வரும் புதிய உயிரினம் என்று ப்ரோமோ போட்டு புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறார்கள்
தாழம்பூ என்பது அந்த சீரியலின் பெயர். அநேகமாக டப்பிங் சீரியலாகத்தான் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.. நடிக்கும் முகங்கள் புதியவர்கள்,
அதே கண்கள் என்று இரவு 10:30 மணிக்கு மேல் டப்பிங் சீரியல் ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு பதிலாக இது ஒளிபரப்பாக வாய்ப்பு உள்ளது.
வித்தியாசம் ஆறு
இந்த சீரியலில் புதிய உயிரினம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கும் நாகினி சீரியல் நாயகிக்கும் ஆறு வித்தியாசம் கூட சொல்ல முடியாதுங்க. பாதி உடம்பு பாம்பு உடம்பு, பாதி மனிதன்.ஆம் கதையின் நாயகன் ஆண். சில நொடிகள் பாம்பு தோல் தெரியுது. முதன்முதலில் தண்ணிக்குள்ளே இருந்து எழுந்து வருது இந்த உயிரினம்.
கோலி கண்கள்
கண்கள் இரண்டிலும் சின்ன பசங்க விளையாடும் கோலி குண்டு உள்ளே இருக்கும் விதம் விதமான டிசைன் போல இவன் கண்களின் உள்ளே டிசைன் இருக்குதுங்க. திகிலனு சொல்றாங்க,பேய்னு சொல்றாங்க, பூதம்னு சொல்றாங்க.ஆனால்,இந்த சீரியல் ப்ரோமோவில் . உலகைத் தேடி வரும்புதிய உயிரினம் என்று பில்டப் கொடுக்கறாங்க.
அதே கண்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அதே கண்கள் சீரியல் வேறு மாதிரி இருக்கும். இந்த மாதிரி சீரியல்களிலும் அமானுஷ்ய சக்தியை மையமாக வைத்துதான் எல்லாமே நடக்கிற மாதிரி இருக்கும்.அனுமார் வால் மாதிரி, பெண்ணின் தலைப் பின்னல் நீள்வது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்..
அமானுஷ்ய சக்தி
இதே போல அமானுஷ்ய சக்தி இந்த சீரியலில் கண்டிப்பாக இருக்கும். இதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருந்தால் மட்டுமே இந்த சீரியலை அந்த நேரத்தில் கொஞ்ச பேராவது விரும்பிப் பார்ப்பார்கள். சீரியல்களில் விஜய் டிவி கொஞ்சம் கவனம் செலுத்தணும்.ரேட்டிங் பற்றி கவலைப் பட்டார்கள் எனில்!
இதோ அந்த டப்பிங் உயிரினம் உங்களை நோக்கி வருகிறது.. அனைவரும் மேடான இடத்தை நோக்கிச் செல்லுங்கள்!