மணி அடிச்சா அசெம்பிள் ஆகிடணும்...கூட்டு குடும்பத்துல....செம ஐடியா!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜா அர்ஜுன் பிரிவு, அர்ஜுனுக்கு ஆக்சிடென்ட், பிறகு ரோஜாவுடன் அர்ஜுன் சேர்வது என்று ஒரே சென்டிமென்ட்.
ரோஜா திரும்ப வீட்டுக்கு வந்தது அர்ஜுன் அம்மா, அர்ஜுன் ரெண்டு பேர் தவிர யாருக்கும் பிடிக்கலை. ஆஸ்பத்திரியில் இருந்து வந்த அர்ஜூனுக்கும், ரோஜாவுக்கு ஆரத்தி எடுக்க கல்பனா ஆரத்தி தட்டு எடுத்து வர, புருஷன் பிரதாப் தட்டிவிடறான்.
நம்ம புள்ளைக்கு ஆரத்தி எடு...ரோஜாவுக்கு எதுக்கு ஆரத்தி எடுக்கறே...அவ நம்ம வீட்டை விட்டு சொல்லாம ஓடிப் போனவ... வீட்டோட மானத்தை காத்துல பறக்க விட்டவன்னு கத்தறார்.
அவ வீட்டுக்குள்ள வரக்கூடாது...அர்ஜுன் மட்டும் உள்ளே போகட்டும்னு சொல்றார் அப்பா. ரோஜாவுக்கு இடமில்லாத வீட்டுல எனக்கு இடம் வேணாம்மா.. உங்களை சுத்தி இத்தனை பேர்
இருக்காங்க..ஆனா,ரோஜா என்னை நம்பி வந்தவ..அவளுக்கு நான் மட்டும்தானே இருக்கேன்னு அர்ஜுன் ரோஜாவை அழைச்சுக்கிட்டு கிளம்பறான்.
கல்பனா அர்ஜுன் அர்ஜுன்னு சொல்லிட்டு அழ..கொஞ்ச தூரம் போன ரோஜா,அர்ஜுனை அழைச்சுக்கிட்டு திரும்ப வர்றா..வந்து...நான் இந்த வீட்டு மருமக...சட்டப்படி கல்யாணம் பண்ணிகிட்டு இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கேன்.
என்னை வீட்டை விட்டு போன்னு சொல்ற உரிமை யாருக்கும் கிடையாதுன்னு தைரியமா சொல்ல, எல்லாரும் வாயடைச்சு நிக்கறாங்க. அப்படி போக சொன்னா இபிகோ செக்ஷன் படி நான் புகார் அளிக்க முடியும்னும் சொல்றா.
வாங்க சார் நாம வீட்டுக்குள்ள போகலாம்னு சொல்லி அவனை அழைச்சுக்கிட்டு போறா. ரூமுக்குள்ள வந்து, சார் நீங்க இந்த வீட்டுலதான் சார் இருக்கணும். அதுக்காகத்தான் நான் எல்லாரையும் எதிர்த்து பேசிட்டு உங்களை அழைச்சுட்டு வந்தேன்னு சொல்றா.
கீழ மணி அடிக்கும் சத்தம்...பார்த்தா கல்பனா பூஜை மணியை தலை கீழா வச்சுக்கிட்டு அடிச்சுகிட்டு நிக்கறாங்க.அப்படி மணி அடிச்சா குடும்பத்துல எல்லார்கிட்டேயும் அவங்க ஏதோ பேச விருப்ப படறாங்கன்னு அர்த்தம்.எல்லாரும் கீழ இறங்கி வர்றாங்க.
அடடா பிரியமானவள் அம்மா டாடா காமிக்க போறாங்களே...
எதுக்காகா மணி அடிச்சு எல்லாரையும் கூப்பிட்டாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.