நிலாவும் நீலாம்பரியும் சவால் விட்டுக்கறாங்களே...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் தினம் தினம் ஒரு ட்விஸ்ட்னு போயிகிட்டு இருக்கு. இப்போ நிலாவும், நீலாம்பரியும் சவால் விட்டுக்கறாங்க.
நிலாவை உன்னை கார்த்திக்குக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன் நிலா, சும்மா பேருக்கு சஞ்சய் மாப்பிள்ளைன்னு சொல்றேன்னு ஏமாத்தி சஞ்சய்க்கு கல்யாணம் கட்டி வைக்க பார்க்கறாங்க.
சஞ்சயை நிலாவின் தங்கை ஸ்வேதாவோட பார்த்துட்ட நிலாவின் அப்பா இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடறார். சரி ,என் தம்பி அசோக்குக்கு ரெண்டாம் தாரமா நிலாவை குடுங்கன்னு நீலாம்பரி மறுபடியும் கேட்க ரெண்டாம் தாரமா என் பொண்ணை குடுக்கமாட்டேன்னு சொல்றார் நிலாவின் அப்பா.
தான் அப்பா,அம்மாவுக்கு வெறும் வளர்ப்பு பொண்ணு மட்டும்தான்னு நிலாவுக்கு தெரிஞ்சுருது. இதனால, நிலாவை வளர்த்த அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருது. ஆஸ்பத்திரிக்கு வரும் நீலாம்பரியிடம் எதுக்கு ஆன்ட்டி என்னை அசோக்குக்கு கட்டி வைக்க கேட்டீங்கன்னு கேட்கறா.
நிலா உனக்கு கார்த்திக் செட்டாக மாட்டான்..நீ எங்க வீட்டுக்கு மட்டும்தான் மருமகளா வரணும்னு விதி இருக்கு நிலான்னு சொல்றாங்க. என் வாழ்க்கையை நீங்க எப்படி ஆன்ட்டி முடிவு பண்ணுவீங்க..நான் கார்த்திக்கைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்றா.
என்கிட்டயே இப்படி பேசறியா..உன்னை நான் விட்டுத்தர மாட்டேன் நிலான்னு நீலாம்பரி சொல்றாங்க. நானும் கார்த்திக்கை விட்டு வர மாட்டேன் ஆன்ட்டின்னு நிலா சொல்றா.
பார்க்கலாமா.. சேலன்ஞ்னு நீலாம்பரி சொல்லி கட்டை விரலை உயர்த்த, நிலாவும் பதிலுக்கு கட்டை விரலை உயர்த்தி சேலன்ஞ்னு சொல்றா. வீட்டுக்கு வந்தா அசோக் தன் மன நிலை சரியில்லாத பொண்டாட்டி கூட ஊரை விட்டு போக கிளம்பறான், இன்னொரு கல்யாணம் செய்துக்க மனம் இல்லாமல்.
நீலாம்பரி ஜெயிப்பாங்களா... இல்லை நிலா ஜெயிப்பாளா?