thenmozhi BA serial: என்ன மதர் இன் லா நீங்க பொங்கி வர நேரத்துல பானையை.. கடவுளே..!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் குல தெய்வம் கோயிலில் பொங்கல் பானை பொங்கி வர்ற நேரத்துல மதர் இன் லா போயி அந்த பானையை தள்ளி விட்டுடறாங்க.
சீரியலில்தாங்க பெரிய மனுஷிங்க செய்யக் கூடாததை எல்லாம் செய்வாங்க.
சின்ன பொண்ணுங்க ரொம்ப ரொம்ப பெரிய மனுஷிங்க மாதிரி நடந்துக்குவாங்க.
உஷார் தேன்மொழி
தேன்மொழி காந்தி நகரில் இருந்து மருமகளா வந்தவன்னு மதர் இன் லாவுக்கு பிடிக்கலை. அவளோட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காத்தான் மாமனார் அவளை மகன் அருளுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறார். தேன்மொழி சில விஷயங்களில் உஷாரா இருக்கா. புருஷனை கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஹீரோசார் ஹீரோ சார்னு வளைச்சு போட பார்க்கறதுல படு உஷார்.
பூவை வீசி
புருஷனோட மன நிலை தெரியாமல் அவனை மல்லிப் பூ அல்வா வாங்கித் தர சொல்றது. கோயிலுக்கு போகும்போது அவன் மட்டும் வண்டியில வரணும்னு மதர் இன் லா பிளான் பண்ண, இவள் அவனுடன் ஒட்டிக்கொண்டு வண்டியில் போவது என்று உஷாராக இருக்கிறாள். மதர் இன் லா பண்ணைக் கூடாத தப்பெல்லாம் பண்றாங்க. பூவை வீசி எறிஞ்சாங்க. அல்வாவை காலால் மிதிச்சாங்க.
பானையை தள்ளி
குலதெய்வம் கோயிலில் வீட்டு பெண்கள் எல்லாரும் பொங்கல் வைக்கிறார்கள். தேன்மொழியும் பொங்கல் வைக்க, அவள் பானையில் சீக்கிரம் பொங்கி வழிய பார்க்கிறது. இதை பார்த்து பொறாமைப் படும் மதர் இன் லா தனது பானை பொங்கி வரவில்லை என்று வேலை மெனக்கெட்டு எழுந்து வந்து, எல்லார் முன்னாடியும் அந்த பானையை தள்ளிவிட்டு, நீ பொங்கல் வைக்க கூடாதுடின்னு சொல்றாங்க.
சாஸ்திரம் சம்பிரதாயம்
மதர் இன் லா கோவத்தை தேன்மொழி மீது காண்பிக்கறாங்க என்றால் அதை கதாசிரியர் வேறு விதத்தில் காண்பிக்கலாமே.. எல்லாரும் ஒரே மாதிரியே கற்பனை பண்றீங்களே.. சாஸ்திரம் சம்பிரதாயங்கள் மீது மதிப்பு மரியாதை இல்லாமலா ஒரு மூத்த பெண்ணாக இருப்பவர்களுக்கு கோவம் வரும்?
சற்றே சிந்தியுங்கள்!