Thenmozhi Serial: தேன்மொழி அன்புத் தேன்மொழி ஹீரோ மேல் ஆசையா?
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் ஜாலியாப் போகுது.பெரும்பாலும் கணக்கெடுத்து பார்த்தால்,விஜய் டிவி அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் இல்லைன்னுதான் சொல்லணும். எதை வேணும்னாலும் சீரியலா எடுங்கள்.
மக்கள் ரசிக்கும்படி அதை எடுக்கணும்.மற்றபடி சீரியல் சுறுசுறுப்பாயிருக்கணும் என்கிற கண்டிஷன்கள் எல்லாம் விஜய்டிவியில் சுத்தமா இல்லை.
இதுவரை ரேட்டிங் வரவில்லை என்று விஜய் டிவியில் சீரியல்களை நிறுத்தியதும் இல்லை, அடிக்கடி நேரம் மாற்றிக் கொடுத்ததும் இல்லை.சீரியல் ஒரு பொழுது போக்கு என்கிற வகையில்தான் விஜய் டிவி செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
அருள் தேன்மொழி
ஊர் முழுக்க கெட்ட பெயர் எடுத்து விட்டவர் அருள்வேலின் அப்பா. எப்போதும் இவர்தான் பஞ்சாயத்து தேர்தலில் ஜெயிக்கிறார்.இந்த முறை வாக்குகள் வருமோ வராதோ என்று, இங்த முறை தனது பையன் அருள்வேலை ஊராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு நிற்க வைக்கிறார்.
நல்லது செய்ய
அருள்வேல் தனது அப்பாவுக்கு தெரியாமல் நல்லது செய்ய ஆசைப்படுகிறான்.நல்லதும் செய்கிறான். மேடையிலும், அப்பாவின் ஆலோசனை கேட்காமல் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று வாக்குறுதி தருகிறான்.இந்த விஷயத்தில் அருள்வேலை எங்கோ ஒரு காந்தி நகரில் வசிக்கும், சாதாரண கேப் ஓட்டும் அப்பாவுக்குப் பிறந்த தனக்கு நல்ல மாப்பிள்ளை என்று ஒருவர் கிடைத்தால் அப்படியே செட்டில் ஆகிவிடலாம் என்கிற மனப்பான்மையில் இருக்கிறாள் தேன்மொழி.
அருள்வேல் ஹீரோ
அருள்வேலின் ஆட்கள் காந்தி நகர் பையன் ஒருவனை, அந்த ஊரின் பையனை காதலிக்கிறான் என்று தெரிந்த அருள் வேலின் ஆட்கள் அவனை அடித்து போட்டு விடுகிறார்கள். அடிபட்டவனை தேன்மொழியும் பார்க்க போயிருக்கிறாள். அருளும் பார்க்க வருகிறான். அருள்வேலும் அவனைப் பார்க்க வருகிறான்.விசாரித்துவிட்டு,செலவுக்கு வச்சுக்கோஎன்று பணமும் கொடுக்கிறான். அன்றைக்கு சொல்கிறாள் அருள்வேலை தேன்மொழி அடிக்கறார்,பணமும் கொடுக்கறார் டா இவரு ஹீரோடா என்று.
அருள்வேல் ஹீரோ
அன்று முதல் அருள்வேலை தேன்மொழி எங்கு பார்த்தாலும் ஹீரோ சார் ஹீரோ சார்னு கூப்பிடுகிறாள். இவனது கட் அவுட் கிழிந்து இருந்தால் வேலை மெனெக்கெட்டு ஒட்டுகிறாள்.ஆனால், அவள் மனதில் காதல் இல்லை.அருள்வேல் குடும்பம் பெரிய பணக்கார உயர்ந்த குல குடும்பம்.அதனால் இவள் மனதில் அந்த எண்ணம் இல்லை.அருள்வேலுக்குத்தான் அந்த பெண் மேல் காதல் வந்தது போல இருக்கிறது.