Kalyana Veedu Serial: சிங்கம் மாதிரி சீறிப் பாய வச்சுட்டாரே திருமுருகன்
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் சிந்தாமணி அம்மாவை சிங்கம் மாதிரி சீறிப் பாய வச்சு நடிக்க வச்சு இருக்கார் இயக்குநர் திருமுருகன். நடிக்க வைத்து இருப்பதற்கு பாராட்டுவதா...இல்லை கேவலமா சித்தரித்து ஷூட் செய்ததற்கு சலித்துக் கொள்வதா?
யாருமே நல்லா இருக்க கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியறவங்க கலாவும், சகுந்தலாவும். எப்போது பார்த்தாலும் யார் குடும்பத்தை கெடுக்கறதுன்னே அலையறாங்களாம்.
இப்படிப்பட்டவங்க குடும்பத்தில் கலாவின் பெண் மூலமா ஒரு கஷ்டத்தை குடுக்க திருமுருகன் திட்டம் போட்டு கதையை கொண்டு போறார். அதுவரைக்கும் ஒரு கஷ்டம் கூட வராதா? மகனுக்கு கேட்டரிங் வந்தால்தானே சாப்பாடு கிடைக்கும்.. அதில் அவருக்கு ஒரு கஷ்டத்தை குடுத்து பாடம் கற்பிக்கக் கூடாதா?
சிந்தாமணி நடிப்பு
கோபியை வரவைக்க சிந்தாமணி கை கால் வராத மாதிரி நடிக்கறாங்க. இவங்களைத்தான் கோபி முதற்கொண்டு அந்த பொம்பளை அந்த பொம்ளை என்று எல்லாரும் கேவலமா பேசற மாதிரி வசனம். அதையும் சுட்டிக் காட்டியும் வசனகர்த்தா திருத்திக்கொள்ளவில்லை. சிந்தாமணிக்கு கை கால் வரவில்லை என்று நம்பி கோபியும் வந்துவிட. கலா சகுந்தலா சிவகாமிக்கிட்டே போட்டு கொடுத்துட்டாங்க.
கோபம் எமோஷன்
குன்றத்தூர் முருகன் கோயிலில் வச்சு கலா கோபி சிந்தாமணிக்கு வைத்தியம் பார்க்க வந்து இருக்கும் விஷயத்தை சொல்லிவிட.. மறுபடியும் சிவகாமி அம்மா கோபமா எமோஷன்ல கத்தி தீர்த்துட்டாங்க. இந்தநேரம் பார்த்துத்தான் அனுசுயா. ரம்யா ரெண்டு பேரும் அந்த பொம்பளையை பார்த்து நாக்கை புடுங்கிக்கற மாதிரி கேட்போம்.. இதுதான் குடும்பத்தை கெடுக்கறவங்களுக்கு நேரும் கதின்னு சொல்லுவோம்னு புறப்படறாங்க.
சிந்தாமணி சிவகாமி
சிவகாமி படுக்கையில் கிடக்கும் சிந்தாமணியை பார்த்து.. இப்போ உன் கதி என்னாச்சு பார்த்தியாடி.. குடும்பத்தை கெடுக்கறவங்களுக்கு இதுதான் கதி..நான் நல்லாத்தான் இருக்கேன்...என் பொண்ணுங்க மூனுக்கும் கல்யாணம் செய்துட்டேன். நீ உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூட முடியாம தெருவில் கிடக்கறே..இன்னும் நாசமா போவே..
நடுத்தெருவில் நிற்பே
அழகு.. ஓங்கு தாங்கான உடம்பு எல்லாம் இப்போ என்னாச்சு பார்த்தியா... இன்னும் நடுத்தெருவுக்கு வந்து அனாதை பிணமா கிடக்கறதை நான் பார்ப்பேன்டின்னு சிவகாமி அம்மா பேச பேச...நடிச்சுக்கிட்டு இருக்கும் சிந்தாமணியால் தாங்கிக்க முடியலை. உடனே கையில் எறிகிட்டு இருந்த ட்ரிப்ஸை பிச்சு போட்டுட்டு எழுந்து நின்னு ஒரு லுக்கு விட்டுச்சு பாருங்க.. அசல் சிங்கம் கர்ஜனைங்க...கொடுமை!