இன்றைய குழந்தைகள் ஹைபிரிட் குழந்தைகளா இருக்காங்க... கோவை சரளா
சென்னை: இன்றைய குழந்தைகள் ஹைபிரிட் குழந்தைகளா இருக்காங்க. அது சந்தோஷமா இருந்தாலும் யதார்த்தத்தை இழந்து விடுவாங்களோன்னு கவலையா இருக்கு என்று கூறி இருக்கார் கோவை சரளா.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சன் டிவியின் முக நூல் பக்கத்தில் நடிகை கோவை சரளா சில விஷயங்களைக் கூறி இருக்கார்.
அப்போதுதான் இன்றைய குழந்தைகள் நம்மைவிட பல மடங்கு புத்திசாலிகளாக எல்லா விஷயங்களும் தெரிந்த குழந்தைகளாக இருக்கின்றனர் என்று சொன்னார்.
கோலி பம்பரம்
சின்ன வயசில் நான் ரொம்ப யதார்த்தமா வாழ்ந்து இருக்கேன். இன்னிக்கு வரைக்கும் அப்படி வாழ முடியலைன்னு ஏங்கித் தவிச்சு ,எப்படி யதார்த்தமா வாழறதுன்னு அந்த வாழக்கையைத் தேடிகிட்டு இருக்கேன்னு சொன்னார். சின்ன வயசில் பம்பரம் கோலி விளையாடறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நம்மை விட
இன்றைய குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளா நிறைய விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்க. அவங்களுக்கு நாம ஒன்னும் கத்துக்க கொடுக்க வேண்டியதில்லை.அவங்ககிட்டே இருந்துதான் நாம நிறைய கத்துக்கணும். அறிவில் ஹைபிரிட் குழந்தைகளா இருக்காங்க. அதனால் எங்கே குழந்தைகளுக்கான யதார்த்தத்தை இழந்துருவங்களோன்னு எனக்கு வருத்தமா கூட இருக்கு என்றார்.
கப்பக்கிழங்கு கமர்கட்
எனக்கு சின்ன வயசில் சாப்பாடு பிரியாணி இதெல்லாம் ரொம்ப பிடிக்காது. நொறுக்குத் தீனி சாக்லேட்ஸ், கமர்கட், கப்பக்கிழங்கு அதாவது குச்சி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும், இன்னிக்கு வரைக்கும் அதை விரும்பி சாப்பிடுவேன், குழந்தைகளுக்கு பிடித்ததை சாப்பிட கொடுங்க.பிடிக்காததை திணிக்காதீங்க.
விருப்பம் முக்கியம்
குழந்தைகள் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ரொம்ப அவசியம்.என்னை என் விருப்பத்துக்கு என் வீட்டில் விட்டதால்தான் இன்னிக்கு கோவை சரளாவா உங்கள் முன் இருக்கிறேன்.அதே மாதிரி படி படின்னு ரொம்ப ஓவர் லோட் கொடுக்காதீங்க என்றும் கூறி இருக்கார் கோவை சரளா.