roja serial: இருக்கற சம்பிரதாயங்களை பறக்க விட்டுடறதும் ..புதுசு புதுசா இருக்கறதும்..ப்பா!
சென்னை: டிவி சீரியல்களில் இருக்கும் சம்பிரதாயங்களை பறக்க விடுவதும்.. புதுசு புதுசா தேடி கண்டுபிடிச்சு இறக்கறதும் ப்பா.. முடியலை!
சன் டிவி சீரியல்களில் கடந்த வாரம் வேண்டுதல் வாரம் போல, வரிசையா எல்லா சீரியல்களிலும் கோயில்களில் வச்சு ஏதாவது ஒரு வேண்டுதல்.
அதிலும் மிக கடுமையான.. நாம் வழக்கத்தில் கண்டிராத வேண்டுதல்கள்...
ரோஜா சீரியல்
சன் டிவியின் ரோஜா சீரியலில், ரோஜா அனாதை பொண்ணு, எங்கியோ கிடந்து வந்தவ...என்ன குலமோ என்ன கோத்திரமோன்னு அடிக்கடி பெரிய மனுஷி அன்னபூரணி அம்மா வாயால் சொல்ல வைப்பதும்...அவங்களே ஒரு படி மேலே போய், ரோஜாவை கை நீட்டி அடிப்பது என்பதும் யாரும் இல்லாதவர்களை அனாதைகள் என்று அடிக்கடி கேவலப்படுத்துவதன் உச்சம்.
சாந்தி பூஜை
செண்பகம் ஆத்மா அலையுது.. அதுக்கு சாந்தி பூஜை பண்ண போறோம். இதுக்கு அனாதை பொண்ணு ரோஜா வரக் கூடாது. இந்த குடும்பத்தை சேர்ந்தவங்கதான் வரணும்னு ஒரு பெரிய மனுஷி பேசுவதும் சரியாய் இல்லை. எந்த பெண்ணா இருந்தாலும், வீட்டுக்கு மருமகளா வந்தாச்சுன்னா, அவள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண். இது கூடவா தெரியாது?
பூமாலையை வீசி
சாந்தி பூஜை செய்துட்டு. முதல் சாப்பாட்டை மகள் அனுதான் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி எதுவும் சாஸ்த்திர சம்பிரதாயத்தில் இருக்கிறதா? சரி அதிருக்கட்டும்.. ரோஜா கொண்டு வந்து தரும் பூமாலையை தூக்கி வீச வேண்டும் என்று எந்த சாஸ்த்திர சமுத்திரதாயத்திலாவது இருக்கிறதா?
பூமாலையை எறியக்கூடாது
பூமாலையை எறியக்கூடாது என்று வயதான ஒரு பெண்மணிக்கு தெரியாதா? அது யார் கொடுத்ததாக இருந்தாலும் பூமாலை பூமாலைதானே? அதை எறிவது சரி என்று எந்த சாஸ்த்திரத்தில் எழுதி இருக்கிறது. இப்படி இருப்பதை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, சாந்தி பூஜைசெய்ய வேண்டும், முதல் சாப்பாட்டை மகள்தான் சாப்பிட வேண்டும் என்கிற சம்பிரதாயம் எல்லாம் புதுசு புதுசாக சொல்கிறீர்கள்?
இருப்பதை எல்லாம் காற்றில் பறக்க வைக்க கற்றுக் கொடுத்துவிட்டு, புதுசு புதுசாக சாஸ்திர சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள், விரதங்களை கற்றுக் கொடுக்கப் போகிறீர்களா?