சொடக்கு போடற நேரத்துல மினிஸ்டர் கைதா...?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மினிஸ்டர் கைது என்பது வேடிக்கையான காட்சியா இருக்கு. நம்பவும் முடியாத காட்சிதான்.
இந்த காலத்துல ஒரு கவுன்சிலரை பாவம் ஒரு போலீஸ் கைது செய்ய முடியாம தவிக்கறாங்க. ரொம்ப அசால்ட்டா காரில் போய்க்கொண்டு இருக்கும் மத்திய அமைச்சர் சகுந்தலா தேவியை போலீஸ் வழி மறித்து கைது செய்யறாங்க.
என்னதான் ஆதாரம் இருக்கட்டுமே கேபினெட் கூடி முடிவு எதுவும் எடுக்க மாட்டாங்களா? முன் அறிவிப்பு அமைச்சருக்கு கொடுக்க மாட்டாங்களா?
நாடு இப்படி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...
அட... நடிகை இனியாவின் தங்கச்சியா இவர்... சாரக் காத்து வீசும்போது!
மோதிரத்தில் சிப்பு
மினிஸ்டர் சகுந்தலா தேவியின் மோதிரத்தை தான் கோமாவிலிருந்த போது எப்படியோ உருவிடறாங்க மகாலட்சுமி. மோதிரம்தானேன்னு விட்டுடறாங்க மினிஸ்டர்.ஆனா,தம்பி ராஜு வந்து அக்கா மோதிரம் எங்கே..அதுலமுக்கியமான ஒரு சிப்பு இருக்குன்னு சொல்றாங்க.
மகாலட்சுமிக்கு சிப்பு
யதேச்சையாக மோதிரத்தை பிரித்து பார்த்த மகாலட்சுமிக்கு, மோதிரத்தினுள் ஒரு கேமிராசிப்பு இருக்கறது தெரிஞ்சுருது. அதன் உள்ளே எதாவது ரகசியம் இருக்கும்னு கமலாவின் மாப்பிள்ளையை வச்சு ஓபன் பண்ணிப் பார்த்தா.... சகுந்தலாதேவி கம்பெனி தயாரிக்கும் சாக்லேட்டில்,போதை மருந்து கணிசமாக கலந்து இருப்பது தெரிய வருது.
கொஞ்ச நேரத்துல
அடுத்த நிமிஷம்னு சொல்லக்கூடிய கொஞ்ச நேரத்துல சகுந்தலா தேவி காரில் வெளியில போயிகிட்டு இருக்காங்க காரை வழி மறிக்குது போலீஸ் கார். என்னஇன்ஸ்பெக்டர்..நான் பந்தோபஸ்து ஒன்னும் கேட்கலையேன்னு சகுந்தலா தேவி சொல்ல...ஒரு இன்ஸ்பெக்டர் வந்து உங்களை அரெஸ்ட் பண்றோம் மேடம்னு சொல்றார்..
அரெஸ்ட் மினிஸ்டர்
உடனடியா மினிஸ்டர் சகுந்தலா தேவி அரெஸ்ட் ஆகறாங்க.அதுக்குப்பிறகு என்ன நடக்குதோ இன்னும் தெரியலை.ஆனா,இது சாத்தியமான்னு கொஞ்சம்கூட யோசிக்காம ஒரு சீன.
இப்படி இருந்தா நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு அர்த்தம்...ஆனா,நம்ம ஊரில் இப்போ நடக்கற ஆட்சியில ஒரு கவுசிலரை கூட இப்படி கைது பண்ண முடியாதுங்க...