kanmani Serial: சொல்லவே வாய் கூசுறதையெல்லாம்.. சீரியலில் அசால்ட்டா காட்றாய்ங்க!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் குமரேசன் வேற யாருக்கோ உண்டான குழந்தையை தன் குழ்நதைன்னு நம்பிடறான்.
இதை தெரிஞ்சுக்கிட்ட மனைவி சரண்யா, இது தன் புருஷன் குமரேசன் குழந்தை இல்லைன்னு நிரூபிக்கறா.
குழப்பமா? குமரேசன் மனைவி எதுக்கு நிரூபிக்கணும்.. முழுக்கதையும் தெரிஞ்சுக்கோங்க...
குமரேசன் சரண்யா
குமரேசன் மனைவி சரண்யாவுக்கு குழந்தை இல்லைன்னு காரணம் காண்பிச்சு அவளை கொடுமை படுத்தறன். கூடவே அவள் அத்தை, மாமனார் இருவரும் கூட பையனுக்கு சப்போர்ட் பண்றாங்க. இப்படி இருந்த குமரேசனுக்கு சித்ரான்னு ஒரு பெண்ணோட பழக்கம் ஏற்படுது.
Eeramana Rojave serial: அண்ணாமலை டிரெண்டிங் ஏலம்... இன்னும் முடியலை.. ஓடிட்டே இருக்கு!
சித்ரா குமரேசன்
சித்ராவுடன் உண்டான பழக்கத்துல, அவள் குழந்தை உண்டாகிடறா. இந்த குழந்தைக்கு குமரேசன்தான் அப்பான்னு அவள் சொல்ல, குமரேசனும் பெருமிதத்தில் துள்ளிக் குத்திக்கறான். அப்பாவாகிட்டானாம். கண்ணன் தட்டிக் கேட்க, உன் மச்சினிக்கு குழந்தை பெத்துத் தர துப்பு இல்லைன்னு அத்தையும், மாமாவும் திட்டறாங்க.
சித்ராவுடன் தனிக்குடித்தனம்
சித்ராவுடன் குமரேசன் தனிக்குடித்தனம் போக, குமரேசன் அம்மாவும், அப்பாவும் அவன் கூடவே போயிடறாங்க. கண்ணன் மாமா பல உண்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டு, சரண்யாவை தயார் படுத்தி சித்ரா குமரேசன் வசிக்கும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான்.
ஒயின்ஷாப் கடைக்காரன்
வீட்டுக்கு போன சரண்யா, சித்ரா வயிற்றில் வளரும் குழந்தை ஒயின்ஷாப் கடைக்காரனோடதுன்னு கண்டுபிடிச்சு நிரூபிக்கறா இதுதான் கதை. வயித்துல வளர்றது ஒருத்தனோட குழந்தை. ஆனால், சொல்லிக்கறது வேற ஒருத்தனையோட குழந்தைன்னு
இதை சொல்றதுக்கு நாக்கு கூசுது...
இன்னொருத்தனுக்கு உண்டான குழந்தையை தன் குழந்தைன்னு நம்பி அந்த சூழ்ச்சி கூட தெரிஞ்சுக்காம ஒருத்தன் கேணத்தனமா நினைச்சு வாழ்ந்துகிட்டு இருக்கான்.
இதை சொல்றதுக்கு நாக்கு கூசுது. ஆனால், டிவி சீரியல்களில் இதை நல்லா வெளிச்சம் போட்டு காண்பிச்சுடறாங்க. பார்க்கற நமக்கு கூசுது.