Barathi Kannamma Serial: வெண்பாவின் சித்து விளையாட்டு சித்தருக்கே தெரியலையா?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றும், கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு கம்மி என்றும் பொய்யான சான்றிதழ் கொடுத்து இருக்கா வெண்பா.
வெண்பாவின் இந்த சித்து விளையாட்டு தெரியாத பாரதி மனம் நொந்து கோயிலுக்கு போறான். அங்கே ஒரு சித்தர், நீ பெற்றால்தான் பிள்ளையா..? என்று அவன் மனசில் உள்ளதைக் கேட்டு பாரதியை அதிர வைக்கிறார்.
உன் மூலம் பிறக்கும் குழந்தைதான் உனக்கு வேணுமா? இல்லை யாரும் இல்லாத அனாதை குழந்தைக்கும் நீ அப்பாவாக விரும்புகிறாயா என்று கேள்வி கேட்கிறார்.
பாரதி கண்ணம்மா
விஜய்டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல், கருப்பு பெண் கதை என்று ஆரம்பித்து, இப்போது அந்த டாபிக்கை விட்டுவிட்டு கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காது என்கிற டாபிக்குக்கு வந்துவிட்டார்கள். இரு பிள்ளைகளுக்கு ஒன்றாக கல்யாணம் ஆகியும், கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பது மட்டும் குடும்பத்தில் பூதாகரமாக கிளம்பிக்கொண்டு இருக்கிறது. முதலில் கருப்புன்னு ஒதுக்கினீங்களே அதுக்கு ஒரு தீர்வு இன்னும் சொல்லாதது ஏன்?
வெண்பா சூழ்ச்சி
பாரதியின் மேல் ஆசைப்படும் அவனுடன் படித்த வெண்பா, பாரதிக்கு நடந்த ஒரு விபத்தை வச்சு, அவனுக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சான்றிதழ் குடுத்துடறா. விபத்துக்கு சிகிச்சை அளிக்கும்போது குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்று டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி கேட்க யாரும் இல்லை,.ஒரு டாக்டராக இருந்தும் பாரதியே கூட இதை கேட்கவில்லை.
கண்ணம்மாவுக்கும் டெஸ்ட்
கண்ணம்மாவுக்கும் டெஸ்ட் எடுக்கணும்னு வெண்பா அவளை பாரதிக்கு தெரியாம அழைச்சுட்டு போறா. கண்ணம்மா புருஷனுக்கு தெரியாம வெண்பாவுடன் டெஸ்டுக்கு போகிறாளாம். இதை நம்ப முடியாமல் கதையை அமைச்சு இருக்காங்க.அவளுக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பு கம்மி என்று பொய்யான சான்றிதழ் கொடுத்துடறா வெண்பா. பாரதியின் அம்மா இந்த சான்றிதழை பார்த்துட்டு, குழந்தை பெத்துக்க குடுக்க துப்பில்லைன்னு கண்ணம்மாவை திட்டியே தீர்க்கறாங்க.
கோயிலில் சித்தர்
இந்த குழப்பத்தில்தான் பாரதி கோயிலுக்கு போறான். அப்போ அங்கே இருக்கும் சித்தார்த்தன் இப்படி கேட்கிறார். நீ உன் குழந்தைக்குத்தான் தந்தையாக விருப்பமா இல்லை அனாதை குழந்தைக்கும் தந்தையாக விருப்பமா என்று.எல்லாம் தெரிந்த சித்தராவது உனக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கு. உன் மனைவிக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்குன்னு அருள் வாக்கு சொல்ல மாட்டாரா? குழந்தை இல்லைன்ற குழப்பத்தில்தான் இருக்கான்னு தெரிஞ்ச சித்தருக்கு அவனுக்கு குழந்தை பெத்துக்கும் தகுதி இருக்குன்னு சொல்லாத தெரியாதா?உங்களுக்கு வசதியா சித்தரையே குழப்பி விடறீங்களே...!