மார்கழி திங்கள் அல்லவா?.. கை வலிக்காமல் ஈஸியா ரங்கோலி போடலாமா?
சென்னை: சஹானா கார்னர் யுடியூப் ரொம்ப சுலபமா ரங்கோலி போடறது எப்படின்னு சொல்லித் தந்து இருக்காங்க பாருங்க.
ரங்கோலின்னா மட்டும் என்ன..எங்களுக்கு டிசைன் போட தெரியாதுன்னு சில பேர் பின் வாங்கிருவாங்க. கவலை படாதீங்க.. இந்த வீடியோவை பாருங்க.
அதிகமில்லை.. வளையல்.. தையல் மெஷின் ஆயில் கேன்.. பிரஷ்..தேநீர் வடிகட்டி நெட் கலர் கோலப் பொடி இவைகள் போதும் வீடியோவுக்குள் முதலில் வாங்க.
மாதங்களில் மார்கழி
மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவை படித்தால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும் என்று சொல்வார்கள். மாதங்களில் கருமை நிற கண்ணனுக்கு பிடித்த மாதம் மார்கழி மாதம் என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட மார்கழி மாதத்தில்தான் அதிகாலை பெண்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்துவிட்டு கோலம் போட்டு வைப்பார்கள்.
ரங்கோலி போடுவது
இப்போதெல்லாம் ரங்கோலி போடுவது என்பது ஃபேஷனாகிவிட்டது. அப்படிப்பட்ட ரங்கோலி கோலத்தை எளிதில் போட முடியவில்லை என்று அவசர காலத்தில் பெண்கள் நேரம் கிடைக்காமல் அவதிப்படுவது என்பதும்.. அதோடு சில பெண்களுக்கு ரங்கோலி கோலம் போட தெரியவில்லை என்பதும் அவதி நிலை.
ரங்கோலி போடுங்கள்
இந்த யூடியூப் வீடியோவைப் பார்த்து சுலபமாக ரங்கோலி கோலம் போடுங்கள். முதலில் வளையல் வைத்து ஆரம்பிக்கிறார் இந்த பெண். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எப்படி ரங்கோலியை பெரிது படுத்துகிறார் என்று பாருங்கள். பிரஷும் கையில் வைத்துள்ளார்.
கோலத்துக்கு பார்டர்
எப்போதுமே கோலத்துக்கு பார்டர் அவசியம். அதுவும் அவை விதம் விதமாக அமைந்து இருக்க வேண்டும்.அதையும் இவர் எப்படி போடுவது என்று கற்றுத் தந்து இருக்கிறார். வாசல் படி, சுவாமி முன் போடும் கோலத்துக்கும் இந்த பார்டர் கோலம் மிகவும் முக்கியம். எனவே, இந்த வீடியோவில் வரும் ரங்கோலியும், பார்டர் கோலமும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.