கவுண்டமணி செந்தில் காமெடி எனக்கு இன்ஸ்பிரேஷன்... தளபதி!
சென்னை: கவுண்டமணி செந்தில் காமெடி எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் என்று தளபதி விஜய் சொல்லி இருக்கார்.
புலி படம் வந்த புதிதில் சன் டிவிக்கு தளபதி விஜய் கொடுத்த நேர்காணலில் சொல்லி இருப்பதை சன் டிவி தனது முக நூல் பக்கத்தில் இப்போது பதிவிட்டு விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தி உள்ளது.
அதில் இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவர் மற்றும் கேட்ட கேள்விகள் மட்டும் பதிவிட்டு, மற்றவற்றை சன் நெக்ஸ்ட் ஆப்பிள் கண்டு மகிழுங்கள் என்று தனது முக நூல் பதிவில் பதிவிட்டு உள்ளது. அதில்...
பாடல் அல்லது சண்டை காட்சிகள் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும்போது தனியாக சேரில் அமர்ந்து கொண்டு யோசித்து கொண்டு இருப்பார். என்ன சார் யோசித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுவார். இப்போது அது என்ன யோசனை என்று கேட்க ஆசை என்று முருகதாஸ் கேட்டு இருந்தார்.
கடை கோடியில் இருக்கும் தம்பி, தங்கை, அம்மா, அப்பா பற்றிய சிந்தனைதான் அது. அவர்களுக்கும் நான் சிந்தித்தவைகள் போய் சேர்ந்தனவா என்பது குறித்த சிந்தனைதான் அது என்று விஜய் பதில் கூறினார்.ஆனால், அப்போது, இந்த பாடல் அல்லது சண்டை அல்லது காட்சி ஷூட்டிங் எப்போது முடியும் என்று சிந்தித்ததாக முருகதாஸிடம் கூறியதாக சொல்லி இருந்தார்.
ஜெயம் ரவி திரையில் தோன்றி விஜயிடம் கேள்வி கேட்டார். அதாவது, உங்களால் பாடலிலும், நடிப்பிலும் காமெடி எப்படி கலக்க முடிகிறது என்று கேள்வி கேட்டார். அப்போது பதில் கூறிய விஜய், எனக்கு கவுண்டமணி, செந்தில் காமெடி ரொம்ப பிடிக்கும். எப்போதும் எனது காரில் அவர்களது காமெடி சிடிக்கள் இருக்கும். கொஞ்சம் டல்லாக இருந்தாலும் அவர்கள் காமெடி போட்டு கேட்பேன். அவர்கள் இன்ஸ்பிரேஷனில் எனக்குள் வருவதுதான் காமெடி என்று சொன்னார்.