Barathi Kannamma - Pandian Stores Serial: மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுன்னு போட மறந்துட்டாய்ங்க
சென்னை: இரண்டு மெகா சீரியல்கள் சங்கமத்தில் கதிர், அகில் இருவரும் மது அருந்தும் காட்சியில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுன்னு ஸ்லைட் போட கூட மறந்துட்டாய்ங்க.
அந்த காட்சி முழுக்க இப்படியே போயிருச்சு. இதெல்லாம் யாருமே கண்டுக்கறதில்லை.
கேட்க யாருமே இல்லேன்னா இன்னுமின்னும் என்று இவங்க அட்டகாசம் தாங்க முடியாம போயிரும்.
விஜய் டிவியின்
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் சங்கமம் வாரம் இது. பாரதி கண்ணம்மாவின் அகில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதிர் இருவரும் இரவு நேரத்தில் தனிமையில் சந்திக்கிறார்கள். அப்போது மெதுவாக அந்த கடை எங்கே இருக்கு பிரதர்னு கேட்கிறான் அகில்.
எந்த கடை
எந்த கடை என்று கேட்கிறான் கதிர்.. அதுதான் பிரதர்.. இந்த கடை என்று கையில் பாட்டிலை எடுத்து காண்பிக்கிறான். அதுவா என்று கேட்கும் கதிர் சைலன்ட் ஆகி விடுகிறான்.ஏன் உங்களுக்குப் பழக்கமில்லையா என்று அகில் கேட்க.. அப்படி சொல்லிட முடியாதுன்னு சொல்றான் கதிர்.
அதானே பார்த்தேன்
அதானே பார்த்தேன் என்று அகில் சொல்ல, அது ஏன் என்னை பார்த்து கூப்பிட்டீங்கன்னு கதிர் கேட்கிறான். ஒரு குடிகாரனை இன்னொரு குடிகாரனுக்கு அடையாளம் தெரியாதான்னு கேட்கிறான் அகில். ஐயையோ நான் குடிகாரன் இல்லைங்க.. சும்மா எப்பயாவதுன்னு சொல்றான் கதிர்.
இருவரும் குடிக்க
பின்னர் இருவரும் குடித்தபடி தங்களது மனைவி பற்றி பேசுகிறார்கள். கதிர் முல்லையை பற்றி ஓவராக புகழ்ந்து பேசுகிறான். இதற்கு இடையில் ஸ்லைட் விளம்பரமாக பொங்கலுக்கு போடப்படும் அசுரன், பெட்ரோமாக்ஸ் படங்களின் விளம்பரங்கள் வருகிறது.
குடிப் பழக்கம் உடல் நலனுக்கு கேடு, மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று எப்போதும் போடுவார்கள். அந்த ஸ்லைட் விளம்பரம் இந்த காட்சியில் விஜய் டிவி ஒளிப்பரப்பவே இல்லை. இது தவறு இல்லையா?