vijayadashami Special: என்னாது...வித்யா பாலன் கொண்டையில விஜய் டிவி தெரியுதா?
சென்னை: காமெடி நிகழ்ச்சி என்று எதை செய்தாலும் சிரிக்கலாம் என்கிற நிலையில் விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. மக்களும் அப்படித்தான் ரசிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு முறை எதிலாவது வெற்றி பெற்றுவிட்ட ஒருவரை வைத்து அவர்கள் குடும்பத்தையே வைத்து ஒரு நிகழ்ச்சி ஷூட் செய்து விடுவார்கள்.இதில் விஜய் டிவியை மிஞ்ச ஆளில்லை.
நிஷா அவரது கணவர், நாட்டுப்புற பாடகர் செந்தில், ராஜலட்சுமி, மற்றும் பாடகர் ஆண்டனி ராஜ், மணிமேகலை அவரின் கணவர் என்று விஜய் டிவியின் காமெடி நட்சத்திரங்ககளை வைத்து விஜய தசமி சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பி உள்ளது விஜய் டிவி.
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ்
விஜய் டிவி விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியாக மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை கொண்டாட்டம் என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. நிகழ்ச்சித் தொகுப்பாளராக மகாபா இருக்க, கலந்துக் கொண்டவர்களே விழுந்து சிரிக்கும் அளவுக்கு நிகழ்ச்சி இருந்தது.
அறந்தாங்கி நிஷா
தங்கதுரை மனைவியும், அறந்தாங்கி நிஷாவும் குழாயடி சண்டை போடுவது போல ஒரு சுற்று.இதில் கமெடி செய்ய வேண்டும்., இவர்களின் கணவர்கள் குடுடிகாரர்களாக நடிக்க வேண்டும். இருவரும் குழாயடி சண்டை போட்ட விதம் இருக்கிறதே.. அப்பப்பா இப்படியும் சண்டை போட்டுக் கொள்வார்களா பெண்களென்று எனும் அளவுக்கு இருந்தது.
குடும்பத்தை சண்டைக்கு
ஒருத்தர் மேல் ஒருத்தர் குடத்தை வீசி அடிப்பதும், வாய் சண்டை போட்டுக்கறதும்னு பயமே வந்துருது. லாரித் தண்ணீர் வரும்போது கூட இப்படி சண்டை பார்த்ததில்லீங்க. ஒருத்தர் குடும்பத்தை ஒருத்தர் இழுத்து பேசிக்கொள்வதும், ஒருத்தர் புருஷனை இன்னொருத்தர் இழுத்து பேசுவதும் என்று காமெடி செய்கிறார்கள்.
புதுமொழி பழமொழி
காமெடியில் கடந்த சில வருடங்களாக பழமொழி செய்து இவர்களொரு புதுமொழி சொல்வது காமெடி என்று ரசிக்கப்படுகிறது. அப்படித்தான் வித்யாபாலன் கொண்டையில விஜய் டிவி தெரியுதாம்னு அறந்தாங்கி நிஷா சொன்னது இருந்தது.