அட..பொம்பளைங்க புடவை முந்தானைக்கு இத்தனை மவுசா...
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் இத்தனை நாள் செம்பாவை நினைச்சு சீரியல் விரும்பிகள் உச்சு கொட்டும் அளவுக்கு, செம்பா நிலைமை இது நாள் வரை இருந்துச்சு.
இப்போ மறுபடியும் செம்பா வீட்டுல எல்லார் மனசிலையும் இடம் பிடிச்சுட்டா. ஓடிப்போன வினோதினி வீட்டுக்கு வர காரணமே செம்பாதான். விநோதினி ஓடிப்போக செம்பா காரணமில்லைன்னு தெரிஞ்சு போகுது.
மாமனார், மாமியார் ரெண்டு பேரும் செம்பாகிட்ட மன்னிப்பு கேட்கறாங்க.புருஷன் அவளை தனியா கூப்பிட்டு என்னை மன்னிச்சுரு செம்பான்னு சொல்றான்.அப்போ நடந்த உண்மைகளை செம்பா சொல்றா.
செம்பாவை பெட்டில் உட்கார வச்சு... (ரொம்ப கற்பனைக்கு போயிறாதீங்க). அன்னிக்கு கையில கற்பூரத்தை வச்சு அம்மனுக்கு காட்டினாளே..அந்த காயத்துக்கு மருந்து போட பக்கத்துல உட்கார சொல்றான்.
சேரன் பாண்டியன் படம் மாதிரி வீட்டுக்கு நடுவுல பெரிய சுவருங்க!
செம்பாவும் உட்கார, கையைப் பிடிச்சு மருந்து போட்டு விடறான்.அவன் முகத்தையே பார்த்து ரசிக்கறா செம்பா.பின்னர் மெதுவாக தனது புடவை முந்தானையால், கணவனின் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்து இருக்கும் வியர்வையைத் துடைக்கறா.
கார்த்திக் நெகிழ்வுடன் அவள் முகத்தைப் பார்க்க, இவளும் நோக்குகிறாள். அதுக்கு பிறகும் கண்ணீர் விட்டு சாரி கேட்கறான் கார்த்திக். எனக்கு இந்த குடும்பத்துல ஒவ்வொருத்தரும் முக்கியம் சின்னையா.
அதோட, நீங்க செய்து கொடுத்த சத்தியத்தை நான் மீற மாட்டேன்னு சத்தியம் செய்யத்தான் நான் கோயிலுக்குப்போனேன் சின்னய்யான்னு சொல்ல,இந்த குடும்பத்துக்காகவே .வாழற உன்னை தப்பா நினைச்சுட்டேன்னு சொல்றான்.
மறுபடியும் முந்தானையால்கணவனின் கண்ணைத் துடைச்சு விடறா செம்பா.
இருவரும் காதலுடன் பார்த்துக்கறாங்க..அந்த காலத்துல முந்தானை முடிச்சுன்னு சும்மாவா . சொன்னாங்க.