சூப்பர் மாம்... இன்னும் எதிர்பார்க்கிறோம்...!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் சீசன் 2 களைகட்டி வருகிறது. ஆனால், இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பிரபலங்களின் மனைவி அல்லது பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
டான்ஸ் மாஸ்டர் சாந்தி தனது மகனுடன் கலந்து கொள்கிறார். டான்சர் ஸ்வேதா, நிகழ்ச்சி தொகுப்பாளர் மனீஷா போன்றவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்கின்றனர்.
மகள் அர்ச்சனா
ஜீ தமிழ் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக வலம் வரும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள். அர்ச்சனா போலவே அவரது மகளும் சிறுமியாக இருந்தாலும் நிகழ்ச்சியை நன்றாகத் தொகுத்து வழங்குகிறார்.
பல விளையாட்டுக்கள்
கண்களை கட்டிவிட்டு பிள்ளைகளின் கைடன்ஸுடன் ஊதா நிற ப்ளூ என்றால் அதை மட்டும் எடுப்பது, ஊதா நிறத்தில் இருக்கும் தண்ணீர் நிரப்பிய பாட்டிலை எடுத்து, அதை நிரப்ப வேண்டிய பாட்டிலை மட்டும் நிரப்புவது என்று கண்கட்டும் வித்தை விளையாட்டு...
அம்மிக்கல் ஆட்டுக்கல்
கிராமிய பாணி அம்மிக்கல் ஆட்டுக்கல் அரைப்பது. தண்ணீர் பம்பில் தண்ணீர் அடிப்பது என்பது போன்ற வேலைகள் செய்வது என்று பல அத்தியாவசியமாக குழந்தைகள் தெரிந்துக் கொள்ள வேண்டிய வேலைகள் என்றும் நிகழ்ச்சியை வழங்கி இருக்கிறார்கள்.
நல்ல விஷயங்களை
இதையும் மீறி பல நல்ல விஷயங்களை சூப்பர் மாம் நிகழ்ச்சியில் எதிர் பார்க்கிறோம். குடும்பத்தில் பெரியவர்களை மதிப்பது என்பது.. எல்லாமே விளையாட்டாக இருப்பது போலத்தான் முதல் சீஸனும் இருந்தது. கடினமான விளையாட்டுக்கள் மூலம் எலிமினேஷன் என்று இல்லாமல் குடும்ப பாரம்பரிய பழக்க வழக்கங்களில் எலிமினேஷன் என்று கடைப்பிடித்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும்.