ஹையா.. ஜாலி.. மாமியாரை அடிச்சுட்டேன்... வெளங்கிரும் வீடு!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் ஒரு மார்க்கமாத்தான் போயிகிட்டு இருக்கு. சில வீடுகளில் மட்டும் இல்லை பல வீடுகளில் நடக்காத காட்சிகள் இந்த கதையில வருது.
டெல்லியிலிருந்து வந்த கோபி குடும்பத்துக்கு, டெல்லியிலேயே எதிரிங்க உண்டு. அவங்களுக்கு பயந்துதான் கோபி வீடு திருவையாறுக்கு வந்தது.
ஒரு கட்டத்துல கோபி குடும்பத்தை திருவையாருக்கே தேடி வந்து, முதல் சம்பந்தியின் வீட்டில் இருந்துகிட்டு, படு அட்டகாசம் பண்ணிட்டாங்க. இந்த முறையும் அவங்க வந்துட்டாங்கன்னு சேதி தெரிஞ்சவுடனே ஆடிப்போயிடறாங்க மூத்த சம்பந்தி.
"ஆமை" வேக சந்திரகுமாரி சீரியலில் "அண்ணாமலை"யும் எட்டி பார்க்கறாங்களே!
கோபி வீட்டு கொல்லை கதவு, வாசற் கதவுன்னு கதவுகளை எல்லாம் மூடிக்கிட்டே வந்து, பயத்துல சம்பந்தி, கோபி தங்கச்சி சவீதா, கோபி அம்மான்னு எல்லாரும் இருக்காங்க.
வீட்டு கதவு படபடன்னு தட்டற சத்தம். மூணு பேரும் பயத்துல கதவைத் திறக்காம நிக்கறாங்க. மறுபடியும் கதவை படபடன்னு தட்டறாங்க. சம்பந்தி போயி, ரவுடிகளை அடிக்க ஆளுக்கு ஒரு கொம்பு தர்றாங்க.
மெதுவா கதவைத் திறப்போம்.. யாரு தலை முதலில் பட்டாலும் அடிக்கறோம்னு ஐடியா சொல்றாங்க. சரின்னு மூணு பேரும் தயாரா நிக்க, கதவைத் திறக்க, எட்டிப் பார்த்தது சம்பந்தியின் மகன். அவனை சம்பந்தி மட்டும் யாரோன்னு நினைச்சு அடிக்க, கடைசியில பார்த்தா பையன்.
என்ன அத்தை யாருன்னு பார்க்க மாட்டீங்களா.. இப்படியா உங்க புள்ளையை போட்டு அடிப்பீங்கன்னு கேட்கறா மருமகள். அதாவது கோபியின் ரெண்டாவது தங்கச்சி.
ஏண்டி யாருயாருன்னு கேட்டோம். வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தேன்னு கேட்கறாங்க. இவர்தான் சஸ்பென்ஸா இருக்கட்டும்னு சொன்னார். அதுக்குன்னு இப்படியா அடிப்பீங்கன்னு கேட்கறா..
நான் எங்கடி இவனை அடிச்சேன்.. பெத்த புள்ளைன்னு தெரிஞ்சு அடிப்பாங்களா.. அதான் இப்படி அடிச்சுட்டீங்களே, மறந்துட்டீங்களான்னு போட்டாளே ஒரு போடு.. மாமியாரின் மண்டையைப் பார்த்து.. இதுல ஹை.. நான் என் மாமியாரை அடிச்சுட்டேன்னு குஷியா வேற சொல்றா கோபி தங்கச்சி..
எதை வேணாலும் நகைச்சுவைன்னு நினைக்கற ஜனங்களா தமிழ் நாட்டு மக்கள்...சிந்தியுங்கள்...