அப்ப... அன்னபூரணி அம்மாவுக்கும் மகாலிங்கம் ஐயாவுக்கும்தான் பிரச்சனையா?
சென்னை: சன் டிவியின் ரோஜா, லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் இணைந்ததில் ரோஜா குடும்பத்தின் அன்னபூரணி அம்மாவுக்கும், லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மகாலிங்கம் ஐயாவுக்கும்தான் பிரச்சனை என்பது போல சீரியலை சங்கமிக்க வைத்துள்ளார்கள்.
சொந்த கிராமத்தில் குல தெய்வமான மாசானி அம்மன் தனக்கு திருவிழா எடுக்க சொல்லி குழந்தையின் மேல் அருள் வந்து சொல்லுது.
உடனே ஊர் பெரியவங்க அன்ன பூரணி அம்மா குடும்பமும், மகாலிங்கம் ஐயா குடும்பமும் பதினஞ்சு வருஷமா பகையில இருக்காங்க..எப்படி திருவிழாவை நடத்துறதுனு ஊர் பெரியவங்க பேசிக்கறாங்க.
தேவராஜை காலி பண்றேன்னு சொன்ன நாகப்பன் வீட்டில் மீனில் குண்டு!
ரெண்டு வீடுகளுக்கும்
ஒரு வழியா முடிவு செய்து, சென்னையிலிருக்கும் ரெண்டு குடும்பங்களுக்கும் தனித்தனி குழுவா போயி திருவிழாவை நடத்தி குடுக்க சம்மதம் கேட்கறாங்க.
வற்புறுத்தல்
குடும்பத்தின் வற்புறுத்தலால் அன்னபூரணி, மகாலிங்கம் ரெண்டு பேருமே திருவிழாவுக்கு வர சம்மதிக்கறாங்க. குடும்பமா புறப்பட்டு போறாங்க.
சித்தர் வாக்கு
அழைப்பு விடுத்துட்டு போனவுடனேயே ரெண்டு வீடுகளுக்கும் சித்தர் ஒருத்தர் வந்து ரெண்டு வீட்டு மருமகள்களிடம் மட்டும் கெடுதல் நடக்க போகுதுன்னு சொல்றார் ரெண்டு மருமகள்களும் பயந்தாலும்,பெரியவங்ககிட்ட சொல்லிக்கலை.
ரெண்டு குடும்ப மோதல்
கிளம்பும்போதே சாலையில் ரெண்டு குடும்பத்தின் வேன்களும் எக்குத்தப்பா வந்து மொதல் ஆரம்பிச்சுருது. அப்போதான் அன்னபூரணி, மகாலிங்கம் ரெண்டு பேரும் பார்த்துக்கறாங்க...
என்ன நடக்க போகுதோ...சித்தர் வாக்கு எப்படி பலிக்குமோ...பார்க்கலாம்.