அட.. கண்ணம்மாவும் பாரதியும் காஃபி ஷாப்ல என்ன பேசிக்கறாங்க?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரேட்டிங்கில் ஒரு நல்ல இடத்தை பிடிச்சிருக்கு. வழக்கமான சீரியல்களில் இருந்து இது மாறுபட்டதா இருக்கு.
பாரதி,அகிலன்னு ரெண்டு பசங்க தொழிலதிபர் சவுந்தர்யா அம்மாவுக்கு.அழகான அஞ்சலி மிஸ் சென்னை.ஆனா,ஏழை வீட்டு பொண்ணு. இவளை பணக்கார பையன் அகிலனுக்கு பிடிச்சு போயிருது.
அஞ்சலி ரெண்டாம் தாரத்து பொண்ணு.. முதல் தாரத்து பொண்ணுதான் கண்ணம்மா.இவ கருப்புன்னு கண்ணம்மாவை யாருக்கும் பிடிக்கலை.
கண்ணம்மாவை
பாரதி டாக்டரா இருக்கான்...பாரதிக்கு கண்ணம்மாவை ரொம்ப பிடிச்சு போகுது. சித்தியோட அம்மா கண்ணம்மாவுக்கு ஒரு கெட்டவனை மாப்பிள்ளையா பார்த்து இருக்கறது பாரதிக்கு தெரிஞ்சு போகுது.
கிழக்கு வாசல் கிராமத்துக்கு ரெண்டு வாசல்தானாமே... கலவரம்னா என்ன செய்ய?
உள்ள குறை
கண்ணாம்மாவை தான் கல்யாணம் செய்துக்கறதா சொல்றான்.ஆனா, தாம்பத்ய வாழ்க்கையில ஈடுபட முடியும்.குழந்தை தர முடியாது மாமா..அது எனக்கு என் உடம்புல உள்ள குறைன்னு சொல்றான்.
ஆகாதே
கண்ணம்மாகிட்ட அப்பா இந்த விஷயத்தை மறைச்சுடறார். கண்ணம்மாவுக்கு கல்யாணத்துல சம்மதமிருந்தாலும், சவுந்தர்யா அம்மாவுக்கு கறுப்புன்னாலே ஆகாதே..இந்த கல்யாணம் எப்படி நடக்கும்னு சொல்றா.உங்க இஷ்டம்ப்பான்னு சொல்லிடறா.
காஃபி ஷாப்
பாரதி கண்ணம்மாவை கோயிலுக்கு அழைச்சுட்டு போறேன்னு சொல்லி,காஃபி ஷாப் அழைச்சுட்டு போறான்.இங்க இப்படி ஒரு இடமிருக்கறது இப்போதாங்க எனக்கே தெரியுதுன்னு சொல்றா.
அடுப்புல வைக்காமால்
ஐஸ் டீ கண்ணம்மா குடின்னு சொல்றான் பாரதி.ஐஸ் டீயை.. அடுப்புல வைக்காமால் ஐஸ் போட்டு குடுத்த மாதிரி இருக்குதுன்னு சொல்றா.எனக்கு நீங்க என்னை அழைச்சுட்டு வந்தது பிடிக்கலைங்கன்னு சொல்றா.
பிடிச்சிருக்கு
நீங்க பிடிக்கலைன்னு சொன்னது எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றான். இனிமே பேசணும்னா கோயிலுக்கு போகலாம்னு சொல்றா. எனக்கு உங்களை பிடிச்சிருக்குன்னும் சொல்றா. பாரதி மிதக்கறான்.
அம்மாவுக்கு
ஆனா, அதே சமயம் இந்த கல்யாணம் நடக்கலேன்னாலும் நாம ஏத்துக்கணும்
உங்க அம்மாவுக்கு என்னை கண்டாலே பிடிக்காது.எப்படிங்க இது நடக்கும்னு சொல்றா..என்னை நம்பு கண்ணம்மான்னு பாரதி சொல்றான்.