அடடே.. ராத்திரி நேரம்.. மல்லிகைப் பூவு... இன்னிக்கு செழியன் அவ்ளோதானா?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் செழியனுக்கும், கண்மணிக்கும் கல்யாணமாகி ஒரு வருஷமாகியும் இன்னும் முதலிரவு நடக்கலீங்க.
இதென்ன கொடுமைன்னு கூட நீங்க நினைப்பீங்க. அதாங்க கொடுமை.. செழியன் நேர்மை தவறாதவனாம்... பொய் சொன்னா பிடிக்காதாம். ஆனா, செழியனை கண்மணி கல்யாணம் செய்துக்கிட்டதே பொய் சொல்லித்தான்.சரி, அப்புறம் எதுக்கு சுகாசினி கூட சேர்ந்து கண்மணியை வீட்டை விட்டு விரட்ட சுகாசினி சொல்லும் சதித் திட்டத்தை ஏத்துக்கறான்?
ஒரு வருஷமாகியும் இன்னும் ஒண்ணும் இல்லையான்னு எல்லாரும் கேட்கறாங்க. அதனால முழுகாம இருக்கற மாதிரி, புருஷன் செழியனிடம் சொல்லிட்டுத்தான் நடிக்கறா.
ஒரு நாளைக்கு நல்ல மூடில் இருப்பான், ஒரு நாளைக்கு எரிஞ்சு விழுவான். இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாள் அம்மான்னு பாடற மாதிரி,ஒரு வழியா முழுகாம இருக்கும் நாடகத்துக்கு,அனன்யா மிரட்டல் மூலமா ஆனந்தியும், கண்மணியும் சேர்ந்து முற்றுப் புள்ளி வச்சுடறாங்க.
கண்மணியின் மாமியார் குழந்தை கலைஞ்சுருச்சுன்னு கவலையில் இருக்க, அந்த நேரம் பார்த்து, மாமா அக்கா எவ்ளோ கவலையா இருக்காங்க.உங்க ரெண்டு பேருக்கும் என்ன வயசாயிருச்சு..
இன்னும் ரெண்டு மாசத்துல குழந்தை உருவாகும்னு அக்காவுக்கு தைரியம் சொல்லுங்க மாமான்னு கண்மணியின் ஓரகத்தி சுமதி சொல்றா.செழியன் சும்மா இருக்க...ஏண்டா பெரியவனே கண்மணி முகத்தை பாரு..எவ்ளோ கவலையா இருக்கா..
நட்ஸ்..சிப்ஸ்..நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடுவாங்க ஓவியா
அவளுக்கு ஆறுதல்சொல்ற மாதிரி இன்னும் ரெண்டு மாசத்துல நமக்கு குழந்தை உருவாகிரும்னு தைரியம் சொல்லேண்டான்னு அம்மா சொல்ல, ஒண்ணும் கவலைப்படாதே கண்மணி..இன்னும் ரெண்டு மாசத்துல நமக்கு குழந்தை உருவாயிரும்னு சொல்றான்.
இதைத்தாண்டா மகனே உன் வாயிலிருந்து எதிர்பார்த்தேன்னு சொல்றா.இரவு மணக்க மணக்க மல்லிகைப் பூவை தலை நிறைய வச்சுக்கிட்டு, செழியனை ஒட்டறா, உரசறா....
ஒரு வருஷத்துக்கு மேலாகியும் குழந்தை இல்லேன்னு யாராவது பேச இனியும் விட்டுடுவேனா.. வெட்கம், மானம், சூடு சாரி சாரி இனியும் அச்சம், மடம் நாணம் பயிர்ப்பு இதெல்லாம் பார்க்க முடியாது மாமுன்னு கிட்ட போறா...
கேட்டேளே அங்கே.. அது பார்த்தேளா இங்கேன்னு இன்னும் கண்மணி பாடி ஆடாத குறைதான்.. பார்க்கலாம் இன்னிக்கு என்ன நடக்குதுன்னு...