For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sembaruthi Serial: என்ன சொல்ல போறாங்க அகிலாண்டேஸ்வரி அம்மா?

Google Oneindia Tamil News

சென்னை: வனஜா புதினா டீ வேணும் என்று பார்வதியிடம் அதட்டல் போட, ஹாலில் அமர்ந்து சூசகமாக பார்த்து அமர்ந்து கொண்டு இருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மா என்ன சொல்லப் போறாங்க என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் நாள் பார்வதியின் மீது வீண் பழி போட்டு வனஜா வாங்கிக் கட்டிக் கொண்ட கதை அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு தெரியாது.

மறுநாள் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கத் தயாராகி ஹாலுக்கு வந்து நின்ற வனஜா பார்வதி பார்வதி என்று சத்தமிட, சோஃபாவில் உட்கார்ந்து இருந்த அகிலாண்டேஸ்வரி என்னதான் நடக்கிறது இங்கு என்று சூசகமாக பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்காங்க..

நல்லதொரு குடும்பம்

நல்லதொரு குடும்பம்

நல்லதொரு குடும்பம் என்று சொல்லும்படியான குடும்ப அமைப்பு ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் குடும்ப அமைப்பாக இருக்கிறது. அம்மாவை மதிக்கும் மகன். தலைக்கு மேல் வளர்ந்த மகனை மதிக்கும் அம்மா என்று... இதே மாதிரி தந்தை மகன் உறவு என்று எல்லாமே உதாரண உறவாக அமைந்து மக்களின் மனதை கவரும் சீரியலாக இந்த சீரியலின் கதை இருக்கிறது.

Sundari Neeyum Sundaran Naanum Serial: இவிங்களுக்கு மட்டும் பூக்கடைகாரங்க எப்படி இப்படி?Sundari Neeyum Sundaran Naanum Serial: இவிங்களுக்கு மட்டும் பூக்கடைகாரங்க எப்படி இப்படி?

எப்படி செயின்

எப்படி செயின்

பணக்காரர்கள் வீட்டில் மட்டும் தங்க செயின் எப்படி காணாமல் போகும் என்று எண்ணும்படி வனஜா செயின் காணவில்லை என்று புகார் கூறி வேலைக்காரர்கள் மீது பழி போடுகிறாள். அதிலும் குறிப்பாக சமையல்காரி பார்வதி மீது சோதனை போட வேண்டும் என்று தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை போட அவளது புடவையை இழுக்க உஷாராகி விடுகிறாள் பார்வதி.

வேணாம் விட்டுவிடுங்கள்

வேணாம் விட்டுவிடுங்கள்

வேணாம் அம்மா விட்டுவிடுங்கள் என்று கத்தியவள், கடைசியில் வனஜாவின் கழுத்தை பிடித்து விடுகிறாள். கழுத்தில் காயம் பட்டுவிடுகிறது. இனிமேல் என்மேல் கையை வைத்தால் அவ்வளவுதான் என்று மிரட்டி விட்டு வெளியில் வந்துவிடுகிறாள். பட்டம்மாவிடம் வீட்டுக்குப் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு வர அப்போது பார்த்து ஆதி வருகிறான்.

என்னாச்சு பார்வதி?

என்னாச்சு பார்வதி?

பார்வதி உனக்கு என்னாச்சு என்று பார்வதியிடம் அவன் கேட்க, எனக்கு ஒண்ணுமில்லை மாமான்னு சொல்றா பார்வதி. இல்லை நான் வெளியில் போகும்போது என் கண் துடிச்சுது.என் கண் துடிச்சா உனக்கு எதாவது நடக்குமே அதான் உடனே வந்தேன்னு சொல்ல... பட்டம்மா நடந்ததை சொல்றாங்க...

பதிலுக்கு கொடுத்துட்டேன்

பதிலுக்கு கொடுத்துட்டேன்

மாமா நான் சின்னம்மாவை சும்மா விடலை மாமா.. பதிலுக்கு கொடுத்துட்டேன்ன்னு பார்வதி வனஜா கழுத்தை பிடித்ததை சொல்றா. அடுத்த நாள்தான் ஹாலில் பழி வாங்கும் நடவடிக்கையாக வனஜா, ஏய் பார்வதி ஹாலில் யாரவது வந்து நின்னா உன் கண்ணு இங்கேதானே நிக்கும். நான் வந்து எவ்ளோ நேரம் ஆகுது.. ஒரு டீ காபி வேணுமான்னு கேட்டீயான்னு கேட்க... அம்மா உங்களுக்கு காபிதாம்மா போட்டுக்கிட்டு இருக்கேன்னு பார்வதி சொல்றா.

எனக்கு இப்போ காபி வேணாம்.. புதினா டீ போட்டு எடுத்துட்டு வான்னு வனஜா பார்வதியை அதட்ட, அகிலாண்டேஸ்வரி அம்மா சூசகமாக முகத்தை வச்சுக்கிட்டு பார்த்துகிட்டு இருக்காங்க. என்ன சொல்லப் போறாங்களோ தெரியலை.

English summary
A vanja mint tea to tell Parvati that she is sitting in the hall, akilanteswari mother, what is the expectation to say.Akilanteswari Mama does not know the story of Vanaja getting vindictive on the first day Parvati.Vanaja Parvati, who was coming to the hall to get ready for the next day, she was sitting on the sofa, shouting "Parvathi".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X