ஷூட்டிங் சமயத்தில் தனியாக உட்கார்ந்து விஜய் என்ன யோசிப்பார்?
சென்னை: தளபதி விஜயின் புலி படம் வெளியான போது சன் டிவி கண்ட நேர்காணலை மறு ஒளிபரப்பு செய்தது சன் டிவி. அப்போது இயக்குநர் முருகதாஸ் விஜயிடம் ஷூட்டிங் சமயத்தில் தனியாக உட்கார்ந்து என்ன யோசிப்பீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டார்.
விஜய் நடிப்பில் வெளியான புலி படம் சமயத்தில், சன் டிவி நடிகர் விஜயை சிறப்பு நேர்காணல் செய்து, அதை ஒளிபரப்பியது. அப்போது இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் திரையில் தோன்றி கேள்வி கேட்டனர்.
அப்போதுதான் முருகதாஸ் ஷூட்டிங் சமயத்தில் விஜய் தனியாக உட்கார்ந்து என்ன யோசிப்பார் என்று அவரிடம் கேட்க வேண்டும் என்று கேட்டார்.
குடிகாரர்களுக்கு நேரம் குறிச்சாச்சு.. .. 7 நாளுக்கு 7 கலர்களில் டோக்கன்.. டாஸ்மாக் நிறுவனம் அதிரடி!
ஒரு நாற்காலியில்
ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும்போது, விஜய் சார் ஷாட் முடிந்ததும், மக்களிடம் இருந்து விலகி வெறும் சுவற்றையோ அல்லது வெற்றிடத்தையோ வெறித்து பார்த்து அமர்ந்திருப்பார். நான் புலி பட ஷூட்டிங் சமயத்தில் பார்த்து இருக்கேன்.
என்ன யோசிப்பார்
அப்போது அப்படி மக்களில் இருந்து விலகி என்ன யோசிப்பார் என்று அவரிடமே கேட்டு இருக்கேன். அப்போது அவர் பதில் சொல்லவில்லை. இப்போது சன் டிவி வாயிலாக கேட்கிறேன் என்று சொன்னார். அப்போது சிரித்த விஜய், ஒண்ணும் இருக்காது.. தூங்கிகிட்டு இருந்திருப்பேன்.. இல்லை இந்த பாட்டு அல்லது ஃபைட் ஷூட்டிங் எப்போ முடியும்னு யோசிச்சுகிட்டு இருந்து இருப்பேன் என்று சிரித்தார்.
உண்மையில் என்ன
உண்மையில் என்ன யோசித்து கொண்டு இருப்பீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டபோது, கடைக் கோடியில் இருக்கும் சகோதரர் சகோதரிகளுக்கு.. அம்மா அப்பாக்களுக்கு என்ன நல்லது செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்திருப்பேன் என்று கூறினார்.
டான்ஸ் ஃபைட் காமெடி
நடிகர் ஜெயம் ரவி திரையில் தோன்றி, டான்ஸ், ஃபைட் என்று இப்படியான சூழலிலும் காமெடி சேர்த்து நன்றாக நடிக்கிறீர்களே.. அது எப்படி அண்ணா என்று கேட்டார். அப்போது பேசிய விஜய், நான் கவுண்டமணி, செந்தில் இவங்களோட ரசிகன். இவங்க காமெடி எனக்குள்ளும், என் நண்பர்களுக்குள்ளும் ஊறிப்போன ஒன்று. சில சமயம் நண்பர்களுடன் பேசும்போது, இவை வெளிப்படும். இதெல்லாம் இன்ஸ்பிரேஷனாக வச்சுத்தான் நான் டான்ஸ், ஃபைட் இவைகளில் காமெடி சேர்த்து நடிக்கிறேன் என்று சொன்னார்.