சாயாசிங்..ப்பா.. இப்படி கண்ணீர் கொட்டுது!
சென்னை: சன் குடும்ப விருதுகளில் கலந்துக்கொண்ட ரீல் மற்றும் ரியல் ஜோடி விருது பெற்றனர். அப்போது கிருஷ்ணா ப்ரொபோஸ் செய்கையில் சாயாசிங் கண்களில் அருவி மாதிரி கண்ணீர் கொட்டிருச்சு.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆதவன் விருது வாங்க வந்த சாயாசிங், கிருஷ்ணா ஜோடியை சும்மா விடவில்லை.
லவ் ப்ரோபோசல் செய்ய வேண்டும் என்று சொன்னார். ஒரு கொத்து ரோஜா மலர்களையும் கொடுத்தார்கள்.
கொத்து மலர்கள்
சன் குடும்ப விருது விழாவில் சன் டிவியின் ரன் சீரியலில் நடிக்கும் ரீல் மற்றும் ரியல் ஜோடிக்கான விருது நடிகை சாயா சிங்,கிருஷ்ணா ஜோடிக்கு வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆதவன், சாயாசிங்கிடம் கிருஷ்ணாவை லவ் ப்ரொபோஸ் செய்ய சொன்னார். கொத்து ரோஜா மலர்களையும் கொடுத்தார்கள்.
கிருஷ்ணா ப்ரோபோசல்
கிருஷ்ணா சாயாசிங்கிடம் லவ் ப்ரொபோஸ் செய்தார். அப்போது, நிறைய கஷ்டம் குடுத்து இருக்கேன். அதே போல சந்தோஷமும் கொடுத்து இருக்கேன் என்று சொன்னார். இதைக் கேட்டதுதான் தாமதம்.. அடுத்த நொடி சாயா சிங் கண்களில் இருந்து அருவி மாதிரி கண்ணீர் கொட்டியது.
இருவரும் மேடையில்
இருவரும் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார்கள் உணர்ச்சிப் பெருக்கில் பார்வையாளர்கள் இருந்த நேரம் அது. விருது கொடுக்க வந்த வனிதா விஜயகுமார் கண்கலங்க நின்று இருந்தார் உண்மையான லவ்வுக்கு என்றைக்கும் முடிவு இல்லை, பிரிவு இல்லை என்று கூறினார் அவர்.
பெண்களுக்கு பிடித்தமானவர்
பெண்களுக்கு பிடித்தமானவர் கிருஷ்ணா என்று சாயாசிங் கூறினார். இப்படி சொல்லிக் கொள்வதில் சில பெண்களுக்கு கர்வம். தங்களது கணவர் எல்லா பெண்களுக்கும் பிடித்தமானவராக இருக்க வேண்டும் என்பது பல பெண்களின் எதிர்பார்ப்பு போலும்! அதனால் இப்படி சொல்லிக் கொள்கிறார்கள்.