For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்போ வனிதாவை கலாய்ச்சது உள்ளூர் ஆட்டக்காரன் இல்லையா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் கலக்க போவது யாரு சீசன் 9 வாரா வாரம் ஞாயிற்று கிழமைகளில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஆதவன், ஈரோடு மகேஷ் ஆகியோர் தவிர வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர்.

கலக்க போவது யாரு என்கிற டைட்டிலுக்கு ஏற்ப நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களும் நகைச்சுவையில் கலக்கி வருகின்றனர்.விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி பல திறமையான கலைஞர்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் மேடையாகத்தான் இருக்கிறது.

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டு நகைச்சுவை செய்துவரும் புகழ், பாலா போன்றவர்கள் கூட இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்று உலகறியப்பட்டவர்கள்.

 காடுகளிலும் மலைகளிலும்

காடுகளிலும் மலைகளிலும்

போட்டியாளர் ஒருவர் மலைகளிலும், காடுகளிலும் வசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கப் போகிறேன் என்று வந்தார். நான் ஏன் அங்கு வசிக்கணும் என்று ஆதவன் கேட்டபோது.. சார் நீங்க நிகழ்ச்சிக்கு வெளிநாட்டுக்கு செல்லும்போது உங்க பைலட்டுக்கு நெஞ்சு வலி வந்து ஃபிளைட்டை மலையில இறக்கிட்டா நீங்க அங்கே வாழ்ந்துதான் சார் ஆகணும் என்று பதில் சொன்னார் போட்டியாளர்.

 வனிதா அக்காவை

வனிதா அக்காவை

யார் யாரையோ கூட்டிகிட்டு போறீங்க.. அந்த மாதிரி இடங்களுக்கு நம்ம வனிதா அக்காவை கூப்பிட்டுக்கிட்டு போலாமேன்னு ஈரோடு மகேஷ் சொல்ல, அமேசான் காட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்.. அந்த காடு பத்திகிட்டு எரிஞ்சுதுன்னு சொல்றார் அவருடன் வந்த இன்னொரு போட்டியாளர் கண்ணா என்று ஆரம்பித்தார்.

 கண்ணா வர்லியே

கண்ணா வர்லியே

கண்ணா நான் எப்படி வருவேன்..எப்போ வருவேன்னு யாருக்குமே தெரியாது.. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்னு பாபா ரஜினி கெட்டப்பில் வந்த ஒருவர் சொல்ல, வரவே இல்லையேன்னு சொன்னார் இவர்.. என்னது என்று கேட்க.. உனக்கு ரஜினி வாய்ஸ் சுத்தமா வரவே இல்லையேன்னு திருப்பிக் கொண்டார் இவர்.

 வயசானாலும் வனிதா

வயசானாலும் வனிதா

தனக்கு வயசானாலும் இன்னும் அழகா இருக்கறதா நினைச்சுகிட்டு பியூட்டி பார்லர் எல்லாம் போயி, மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு, சும்மா லல்லல்லான்னு சுத்திகிட்டு இருக்காங்க பாரு அது ஆன்டி ஆசனம் என்று சொல்ல... அப்போதுதான் வனிதா நினைவு வந்தவர் போல வனிதாக்கா வணக்கம் என்று சொன்னார் மற்ற ஒருவர்.

இதைக் கேட்ட வனிதா செருப்பு... செருப்பு என்று சிரித்துக் கொண்டே சொன்னார். விஜய் டிவி வாய்ஸ் வனிதா அக்காவையே ஒருத்தன் கலாய்க்கிறான்னா அவன் கண்டிப்பா வெளியூர்காரனாத்தான் இருப்பான்னு சொல்லுது.

English summary
Vijay TV is kalakka povathu yaaru with 'Who's Season 9' airing on Sundays at 2pm. Apart from Madurai Muthu, Adhavan and Erode Mahesh, both Vanitha Vijayakumar and Ramya Pandiyan are also judges .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X