For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலா யாருங்க...அவளை இந்த நீலாம்பரி மருமகளாக்க துடிக்கறாங்களே... ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியில் நிலா சீரியல் நல்லாத்தான் இருக்கு.நிலாவும் அம்மான்னுதான் கூப்பிடறா.. ரெண்டாவது பொண்ணு ஸ்வேதாவும் அம்மான்னுதான் கூப்பிடறா. அம்மா ஏன் பாரபட்சம் பார்க்கறாங்க...

ஸ்வேதா கோடீஸ்வரன் வீட்டுக்கு மருமகளா போகணும்னு அம்மா ஆசைப்படறாங்க. ஆனா, நிலா வீட்டு வேலை செய்யணும், வெளிநாட்டுல போயி படிக்க கூடாதுன்னு சொல்றாங்க. எதுக்கு நிலாவுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கறேன்னு அப்பா கேட்கறார்.

ஏன்னு உங்களுக்கு தெரியாது..தெரியாதுன்னு கேட்டுட்டு அம்மா போயிடறாங்க. அப்பாவின் நினைவில் பச்சிளம் குழந்தையை இப்போதைய மனைவிதான் கொடுத்துட்டு கோபமாக போனதை காமிக்கறாங்க.

நீங்க பிசைங்க சார்.. நானும் கத்துக்கறேன்.. மாவிலும் ரொமான்ஸை மிக்ஸ் பண்ணிட்டீங்களே எஜமான்! நீங்க பிசைங்க சார்.. நானும் கத்துக்கறேன்.. மாவிலும் ரொமான்ஸை மிக்ஸ் பண்ணிட்டீங்களே எஜமான்!

ஸ்வேதாவும்

ஸ்வேதாவும்

நிலாவும் ஸ்வேதாவும் காலேஜில் படிக்கறாங்க. ஸ்வேதாவுக்கு முத்தம் கொடுத்து அனுப்பும் அம்மா தனக்கு மட்டும் அப்படி செய்வதில்லைன்னு அம்மாகிட்ட ஏக்கமா கேட்கறா.அப்போது ஸ்வேதா வழுக்கி விழ, உன் பொறாமைதாண்டி இவ வழுக்கி விழுந்துட்டான்னு அம்மா சொல்றாங்க.

கார்

கார்

கல்லூரி விட்டு வரும் நிலா மீது கார் மோதிவிடுகிறது. அதிலிருந்து இறங்கியவன் கோடீஸ்வரி நீலாம்பரியின் மகன் அசோக். சாரிங்கன்னு சொல்லி விழுந்த நிலாவுக்கு கை கொடுக்கிறான்.அவள் இவனையே பார்த்திருக்க.. அவன் இவளையே பார்த்திருக்க, திடீரென்று இன்னொரு கை அசோக்கின் கையைத் தட்டி விடுது.

நிலாவை

நிலாவை

கல்யாணமாகாத ஒரு பொண்ணு கையை பிடிக்க சொல்றியே.. எவளாவது பிடிப்பாளாடான்னு கேட்கறான், நிலாவின் பின்னாலிருந்து ஒருவன். நீங்க யாருன்னு கேட்கறான் இவன், நான் கார்த்திக்டா, இவளை கட்டிக்க போறவன்னு சொல்றான் அவன்.சாரிங்க தெரியாம லேசா மோதிருச்சுன்னு சொல்ல, இவன் சண்டைக்கு போக, நிலா கார்த்திக்கை சமாதானப்படுத்தி அழச்சுகிட்டு போறா.

நிலாவை

நிலாவை

நிலாவின் மாமாவிடம் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து ஒரு பொண்ணு வேணும்னு கேட்கறீங்க நீலாம்பரி. நிலாவின் போட்டோவை அவனது அக்கா அதாவது நிலாவின் அம்மாவிடம் படத்துடன் சம்மதமும் வாங்கி நீலாம்பரியிடம் தர்றான். நீலாம்பரிக்கு பெண் பிடித்து போக கல்யாணம் பண்ணிடலாம்னு சொல்றாங்க நீலாம்பரி

நீலாம்பரி ஏன்?

நீலாம்பரி ஏன்?

நிலாவை வசதியான இடத்துல கல்யாணம் கட்டி கொடுத்துட்டா, ஸ்வேதாவுக்கு தானாக கோடீஸ்வர மாப்பிள்ளை கிடைப்பான்னு நிலாவின் அம்மாவும் ஒத்துக்கறாங்க.. அப்போ நிலா யாரு? நீலாம்பரி அவளை மருமகளாக்கத் துடிக்கறாங்களே ஏன்?

English summary
Nila's mother also agrees that Swetha will automatically get a wealthy groom if she gives the nila in a comfortable place. So who is that nila? Why do you think Nilambari is her daughter-in-law?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X