கிராமத்தான் சத்யா அஞ்சலிக்கா சீதாவுக்கா... பின்னே சீதா எதுக்கு அழுவுறா!
சென்னை: சன் டிவியில் மாலை நேரத்துல ஒளிபரப்பாகும் சீரியல் சந்திரகுமாரி. சந்திராவை ருத்ரா அடிச்சு போட, காப்பாத்தினவங்க ஒரு கிராமத்து குடும்பம்.
அந்த கிராமத்து பெரியவரின் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் அந்த ஊரில் இருந்தா ஆபத்துன்னு சந்திரா தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறாங்க.
சத்யா அஞ்சலியின் முறைப்பையன். ரொம்ப நல்லா கலகலப்பா இருப்பவன்.சந்திரா காணாமல் போனப்ப, அஞ்சலிக்கு உறுதுணையா இருந்தவனுக்கு, அஞ்சலியை ஜெயிலிலிருந்து வெளியில் கொண்டு வந்ததும் இந்த சத்யாதான்.
ரோஜா மாதிரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு ஓகேவா..!
இதனால சத்யாவை அஞ்சலிக்கு பிடிக்கும். அஞ்சலிக்கு கல்யாணம் செய்ய போறேன்னு சொன்னவுடனே சத்யாவை வளர்த்த பாட்டி, சத்யா ரொம்ப நல்ல பையன்.நீ ஊர்ல இல்லாதப்போ, அவன்தான் அஞ்சலிக்கு உறுதுணையா இருந்தான்
சத்யாவுக்கு அஞ்சலியை புடிக்கும். சத்யாவுக்கு அஞ்சலியைப் பொண்ணு கேட்கறேன்மான்னு பாட்டி சந்திராகிட்ட கேட்கறாங்க.
எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும். அஞ்சலிகிட்டயும் கேட்கணும்னு சந்திரா சொல்றாங்க.இதை சீதா கேட்டுகிட்டு இருக்கா.இதுக்கு நடுவுல ஒரு நாள் அஞ்சலிக்கு ஆஃபீஸுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றா சீதா.
அப்போ என்னங்க இங்கேன்னு கேட்கறான். .அஞ்சலிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேங்கன்னு சொல்லிட்டு ஏறினவ தடுக்கி விழப்போறா. அப்படியே அவளது இடையை தாங்கிப் பிடிச்சுக்கறான்.சத்யா.
அப்போ மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டாளோ என்னவோ தெரியலை..வாசற்படியில் உட்கார்ந்து நிறைய கண்ணீர் விட்டு, அழுதுகிட்டு இருக்கா சீதா. சத்யா வந்த உடனே அவனிடம் ஆசையா பேசறா. டான்ஸ் ஆடறா.. இப்போ சொல்லுங்க சீதா,சத்யா மேல ஆசைப்படறாதானே..