பாரதி எதுக்கு கண்ணம்மா அப்பாகிட்ட பேசறான்.. அம்மா பார்த்துட்டாங்களே..!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவை கட்டிக்க ஆசைப்படறான். ஆனா, கண்ணம்மாவை பாரதியின் அம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது.
சவுந்தர்யா அம்மாவுக்கு கறுப்புன்னாலே ஆகாது.அந்த வகையில கறுப்பு பெண் கண்ணம்மாவை பிடிக்காது. பாரதி அம்மாவை எப்படி சமாளிக்கறதுன்னு யோசிக்கறான்.
இதுக்கு நடுவுல தம்பிக்கு பார்த்து இருக்கும் கண்ணமாவின் தங்கச்சி அஞ்சலி அவ்வப்போது தன்னை டீஸ் பண்ணி வெறுப்பேத்தறதை அவங்க அப்பாக்கிட்ட சொல்லணும்னு கண்ணம்மா வீட்டுக்கு போறான்.
அங்கே கண்ணம்மாவை கல்யாணம் பண்ணிக்க போறது யாருன்னு பாட்டியும், சித்தியும் கண்ணம்மாவை கேட்டு தொந்திரவு பண்றாங்க. சொல்லலைன்னதும் அவளை வீட்டை விட்டு துரத்தறாங்க.
அந்த நேரம் பாரதி வந்து அவளை பிடிச்சுக்கறான். கண்ணம்மாவின் அப்பாவும் வந்துடறார் பாரதி, கண்ணம்மாவின் சித்தியிடம் இந்த வீட்டை விட்டு கண்ணம்மாவை துரத்தினா நீங்க யாருமே இந்த வீட்டில் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு போறான்.
கண்ணம்மாவின் அப்பாவை உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு சொல்லி கூப்பிடறான்.நடு ரோட்டில் ரெண்டு பேரும் பேசிகிட்டு நிக்கறாங்க. கண்ணம்மாவுக்கு என்னை பிடிச்சிருக்கா மாமான்னு கேட்கறான் பாரதி.
என்ன சின்னய்யா இந்த நேரத்துல... நீங்க போங்கு பண்றீங்க!
இங்க சித்தி கொடுமை தம்பி..உங்க வீட்டுக்கு வந்தா மாமியார் கொடுமை இருக்குமேன்னு அப்பா சொல்றார்.அதை நான் பார்த்துக்கறேன் மாமான்னு சொல்றான் பாரதி.இப்படி ரெண்டு பேரும் பேசிக்கறதை பாரதியின் அம்மா சவுந்தர்யா பார்த்துட்டு, காரை நிறுத்திடறாங்க.
என்ன நடக்கப் போகுதோ...