செம்பாவை துரத்துவதிலேயே குறியா இருக்காரே... என்னவா இருக்கும்?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் செம்பாவை ஊரைவிட்டு துரத்துவதில் குறியாக இருக்கார் பெரியய்யா.
செம்பா அப்பாவுக்கு என்னவோ துரோகம், துன்பம், கஷ்டம்னு எதையோ கொடுத்திருக்கார்.அது செம்பாவுக்கு தெரிஞ்சுருமோன்னு இப்போ ரொம்ப பயத்தில் இருக்கார்.
அதனாலதான் குருஜி வீட்டின் மகாலட்சுமி செம்பா இல்லாம குலசாமி கோயிலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லியும், செம்பாவை குலசாமி கோயிலுக்கு அழைச்சுட்டு வர வேணாம்னு சொல்றார்.
நிலா சோறுன்னா என்னா.. நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே...!
செம்பா கார்த்திக்
கார்த்திக் செம்பாவை விட்டுட்டு வர மனசில்லாம அவளையும் குலசாமி கோயிலுக்கு அழைச்சுட்டு வந்துடறான்.அப்பவே பெரியய்யா முகம் மாறிடுது. சரி, பொங்கல் வச்சுட்டு கிளம்பட்டும்னு குருஜி சொன்னதா சொல்றார்.
காப்பு கையில்
கோயிலில் செம்பாவுக்கும் பூசாரி காப்பு கட்டிடறார்.காப்பு கட்டினா அந்த ஊரை விட்டு திருவிழா முடியும் வரை போகக் கூடாதுன்னு விதிமுறை.
விதிமுறையை
விதிமுறையை மதிக்காமல் செம்பா ஊருக்கு போக புறப்பட பெரிய அய்யாவும் கிளம்ப சொல்றார். அவளை பிரிய மனமில்லாத கார்த்திக், பைக்கில் டிராப் பண்ண போக,வேனை கிராஸ் பண்ணும் போது பைக்கிலிருந்து ரெண்டு பேரும் கீழே விழுந்துடறாங்க.
கையில் அடி
செம்பாவுக்கு கையில் நல்ல அடி பட்டுவிட, ஊருக்கு போவது நின்று போகிறது. அப்போதும் பெரியய்யாவின் முகம் பேயறைந்தாற் போல ஆகிறது. கோச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போறார்.என்ன ரகசியமோ தெரியலை...