For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோன்னா அது எதுக்குங்க.. நடிகை நீலிமா பொளேர் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நீலிமா, தம்பதியர் ஒற்றுமைக்கு அற்புதமான மூன்று விஷயங்களைக் கூறினார். சின்னத்திரை, பெரிய திரை என்று ஒரு வலம் வந்த பிறகு தான் காதலித்த பையனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இருப்பினும் தொழில் பக்தி காரணமாக திருமணமாகியும் குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலம் தள்ளிப் போட்டும் இருந்தார்.

விஜய் டிவியின் நீயா-நானா நிகழ்ச்சியில் ஒரு முறை இவரும் கலந்துகொண்டு சின்னத்திரை நடிகர்களுக்கான வாய்ப்புக்கள் குறித்து பேசினார். அப்போதுதான் திருமணம் ஆகியிருந்த சமயம்.

நெஞ்சைப் பிளந்து ராமரை காட்டி பக்தி எனில் இதுதான் என உணர்த்திய அனுமன் ! நெஞ்சைப் பிளந்து ராமரை காட்டி பக்தி எனில் இதுதான் என உணர்த்திய அனுமன் !

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

சின்னத்திரையில வாய்ப்பு கேட்டு போனா, திருமணமான நடிகையா, அப்படின்னா வேண்டாம்பான்னு சொல்லிடுவாங்க. என்ன காரணம்னு பார்த்தா, இது மெகா சீரியல், இவங்க உடனே கர்ப்பமாயிருவாங்க.. வயித்துல குழந்தை இருக்கும்போது சீன்ஸ் சூட் செய்வது கஷ்டம்னு வாய்ப்பு தர மாட்டாங்க. உடனே குழந்தை பெத்துக்குவோம்னு யார் சொன்னா, நீங்களே ஏன் முடிவு பண்றீங்கன்னு கேட்டு அனைவரையும் அதிர வைத்தார்.

செய்தார்.

செய்தார்.

சொன்னது போலவே காதல் சில வருடம், கல்யாணமாகி சில வருடங்கள் என்று கழித்து கடந்த இரு வருடம்தான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஒற்றுமைக்கு

ஒற்றுமைக்கு


சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்யில் இமான் அண்ணாச்சியிடம் பேசியபோது, கணவன் மனைவி ஒற்றுமைக்கு மூன்று விஷயங்களை யதார்த்தமாக கூறினார்.
என்னைவிட நீ அதிகமா சம்பாதிக்கறேன்னு கணவன் மனைவியுடன் ஈகோ பார்க்க கூடாது, உன்னைவிடா நான் அதிகமா சம்பாதிக்கறேன்னு மனைவி கணவனைக் குத்தி காண்பிக்க கூடாது. எல்லாம் நமக்குத்தானே..

வேலை

வேலை

நான்தான குடும்பத்துக்கு அதிகம் உழைக்கிறேன்...நீ சும்மா என்று கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ சாதாரணமாக எடைப்போட்டுவிடக் கூடாது.

ஆதரவாக

ஆதரவாக

உனக்கு கஷ்டம் வரும்போது நான் இருக்கிறேன், எனக்கு கஷ்டம் வரும்போது நீ பார்த்துக்கொள் என்று இருவரும் புரிதலுடன் இருக்க வேண்டும் என்கிறார். ஈகோதான்மா எல்லார்கிட்டயும் இருக்கு, அதனாலதான் தூக்கிப் போட்டுட்டு போயிடறாங்கன்னு இமான் அண்ணாச்சி சொல்கிறார்.

ஈகோதான் தாலி

ஈகோதான் தாலி

அப்படீன்னா அவங்களுக்கு கல்யாணமே வேண்டாம், ஈகோவை தாலியா கட்டிக்கிட்டு வாழ வேண்டியதுதான் என்று நீலிமா சிரித்துக்கொண்டே சொன்னார் .. அதை விடுங்க. அது என்ன நீலிமான்னு கேட்டா, நீலிமா என்பது அம்மனின் பெயராம். நல்லதும்மா.

English summary
Husband can not be married if ego is in the wife. wife can not be married if ego is in the husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X