ஆமா, நிலா எதுக்கு நீலாம்பரி வீட்டுக்கு மருமகளா போகணும்?
சென்னை: சன் டிவியில் வரும் நிலா சீரியல் வழக்கம்போல எல்லா சீரியலையும் போல இருந்தாலும், நிலா யாருன்னு தெரியறவரைக்கும் ஒரு சுவாரஸ்யம் சீரியலில் இருக்கு.
அதோட, நிலாவை இந்த நீலாம்பரி அம்மா தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கறாங்களே அதுவும் ஏன்னு கேள்வி வருது. நீலாம்பரிக்கு தம்பியா ஒருத்தன் வர்றான் அவன். அந்த வீட்டுல யாரு, வேலைக்காரி உண்மையிலேயே வேலைக்காரிதானா..
மேற்கண்ட கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியலை... அப்புறம் நிலா சீரியலை பார்க்காம இருக்க முடியுமா?ஆமா, இந்த நிலா பொண்ணுக்கு மட்டும் தினம் தினம் ஏதாவது நடக்குதே ஏன்?
முடியல மச்சான்... எப்பவும் அவ நினைப்பாவே இருக்கு..!
காயம்
கல்லூரியில் இருவரும் லேப்ல ஏதோ செய்துகிட்டு இருக்க, திடீர்னு நிலாவுக்கு காயம். துடிதுடித்து போகிறான் அவளது காதலன் கார்த்திக். கையிலும் காயம் பட்டுவிட, நிலா அவனுக்காக துடிச்சு போறா.முதல் எபிசோடிலேயே வண்டியில மோதி கீழே விழுந்துட்டா.
அசோக்குக்கு
தம்பி என்னடா வரும்போதே இப்படி வரேன்னு கேட்கறா நீலாம்பரி.. ஒண்ணுமில்லைக்கா.. வரும்போது ஒரு பொண்ணு மேல லேசா இடிச்சுட்டேன். பொண்ணுக்கு ஒன்னும் ஆகலை.. அதான் டென்க்ஷனா இருக்கு. சரி விடு... என் புள்ளை அசோக்குக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்னு சொல்றாங்க
அதுக்குள்ளே
எதுக்குக்கா அதுக்குள்ளே... இன்னும் கொஞ்ச நாள் ஆக்கட்டுமேன்னு தம்பி சொல்றான். உன்கிட்ட ஆலோசனை கேட்கலை.. முடிவை சொல்லிட்டேன்.. அவ்ளோதான்னு சொல்றாங்க நீலாம்பரி.
தம்பி
வேலைக்காரி நீலாம்பரியின் தம்பிக்கு காபி குடுத்துகிட்டே, இப்பவே நீலாம்பரி அசோக்குக்கு கல்யாணம் செய்யறென்னு சொல்றாங்க நீ ஒண்ணும் சொல்லலியான்னு கேட்கறா.. அதுவும் நிலான்னு ஒரு பொண்ணு போட்டோவை வச்சுகிட்டு, இந்த பொண்ணுதான் மருமகன்னு சொல்றாங்கன்னு தெரியலியேன்னு சொல்றா.
ஆமா, நிலா எதுக்கு நீலாம்பரி வீட்டுக்கு மருமகளா போகணும்?