மற்ற மாநிலங்களில் தமிழர் முறைப்படி திருமணம் செய்வதில்லையே...!
சென்னை: தமிழர் முறைப்படிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறது ஒரு தரப்பு.
இல்லை, வட இந்திய முறைப்படியோ இல்லை வேறு முறைப்படியோ திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறது இன்னொரு தரப்பு.
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியின் இந்த வார விவாத தலைப்புத்தான் இது.
சங்கீத் மெஹந்தி
பெரும்பாலும் மெஹந்தி சங்கீத் நாம் பண்றதில்லை. இப்போ நாம அதை வழக்கப்படுத்திகிட்டு வர்றோம். எங்க அக்கா பொண்ணுக்கு கூட சமீபத்தில் அதை செய்தோம் என்று ஒரு பெண் சொன்னார். இப்போது பெரும்பாலான திருமணங்களில் மெஹந்தி சங்கீத் வழக்கமாகி வருவதையும் அவர் சொன்னார்.
சண்டா சாரட்
திருமணமான ஒரு இளைஞர் பேசுகையில், சார் எங்களோட கல்யாணத்தின் போது சாரட் வண்டியில ஊர்வலம் வச்சு இருந்தோம் சார். செண்டை மேளம் வச்சு இருந்தோம். செண்டை மேளம் கேரளாவில் வழக்கம். ஒன்றரை கிலோ மீட்டர் அளவுக்கு கிராண்டா நல்லா நடந்தது சார் என்று சொன்னார்.
குதிரை வண்டி
சண்டை மேளம், குதிரை வண்டி ஊர்வலம் எல்லாம் இப்போ பத்தாண்டு காலத்தில் தமிழகத்துக்கு வந்தது. செண்டை மேளம் கேரளாவில் இருந்து வந்தது. குதிரை வண்டி குஜராத்தில் இருந்து வந்தது. அவங்க வணிகர்களாக இருக்கும்போது இங்கு கொண்டு வந்தது என்று சொன்னார் இன்னொருவர்.
நாதஸ்வரமும் தவிலும்
தவிலும் நாதஸ்வரமும் கூட நாங்க வச்சிருந்தோம். செண்டை மேளக்காரங்களுக்கும் இவங்களுக்கும் போட்டியே கூட நடந்தது.. அது ஒரு பல்சுவையாக இனிமையாகக் கூட இருந்தது என்று முன்பு பேசியவர் மறுத்துக் கூறினார். அதற்கு இவர் கேரளாவில் ஏன் நாதஸ்வரம் வைப்பதில்லை? மற்ற மாநிலங்களில் தமிழர் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு மாநிலங்களில் கூட செய்வதில்லையே ஏன் என்று கேட்டார்.
இப்படி சுவையான வாதமாக போகும் நீயா நானாவை வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு பாருங்கள்.