ஏன் உங்கள் மகள்கள் வேலைக்கு போக வேண்டும்?
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் மகள்கள் கட்டாயம் வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்கள் மற்றும் அவர்களது மகள்கள் கலந்துக்கொள்ளும் விவாதம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் இல்லத்தரசியின் கதை என்று பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்து, ஒரு சில நாளில் லாக்டவுன் வந்துவிட...சீரியல் ஒளிபரப்பு நின்று போனது.
ஆனாலும், விஜய் டிவியின் ஒவ்வொரு சீரியல், நிகழ்ச்சியிலும் பாக்கியலட்சுமி சீரியலின் கதையை ஒட்டி இல்லத்தரசிகளுக்கு முக்கியத்துவம் தருவது என்று எல்லாவற்றிலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கான ப்ரோமோ தெரிகிறது.
இல்லத்தரசிகள் மகள்கள்
இல்லத்தரசிகளாக இருக்கும் அம்மாக்கள் தங்களது மகள்கள் கட்டாயம் வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான காரணத்தையும் இல்லத்தரசி ஸ்தானத்தில் இருந்தே சொல்கிறார்கள். உங்கள் மகள்கள் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் கேட்டதற்கு...
வேலைக்கு போயிட்டு வந்து
வீட்டில் வேலைக்கு போயிட்டு வந்து கணவர் கொடுக்கும் டார்ச்சர் இருக்கே... வீட்டில்தானே இருக்கே.. பனியன் ஏன் துவைக்கலே...சும்மாத்தானே இருந்தே இந்த லுங்கியை ஏன் துவைக்கலேன்னு எப்போ பார்த்தாலும் நாம் சும்மா இருந்த மாதிரியே கேட்பாங்க சார்னு ஒரு அம்மா பதில் சொன்னார்.
2 பேரும் வேலைக்கு
இந்த காலத்துல 2 பேரும் வேலைக்கு போனால்தான் சார் சமாளிக்க முடியும். பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்க முடியும் என்று ஒரு அம்மா சொன்னார்.நான் வேலைக்கு போனா என் குழந்தைங்களை யார் பார்த்துக்குவாங்கம்மா என்று ஒரு பெண் அம்மாவிடம் கேள்வி கேட்டார்.
இந்த நிலைமைக்கு
உன்னை மாதிரி குழந்தையை யார் பார்த்துப்பா.. யார் சமைப்பான்னு பார்த்து நான் வீட்டில் உட்கார்ந்து இருந்தால் நீ இந்த நிலைமைக்கு வந்து இருக்க முடியாதுன்னு அம்மா பதில் சொன்னார். இப்படி முக்கியமான விஷயங்களை விவாதிப்பதாக வரும் வார ஞாயிற்று கிழமையின் நீயா நானா நிகழ்ச்சி இருக்கிறது.