சவுந்தர்யா மனசை மூடி வைப்பது ஏன்... இந்த காலத்தில் இப்படியுமா....?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யா மனசு நிறைய கண்ணன் மாமாவை வச்சுக்கிட்டு, அதை மூடி மறைப்பது இன்றைய காலத்துக்கு மட்டுமல்ல எந்த காலத்துக்கும் ஒட்டாத மாதிரிதான் இருக்கிறது.
இன்றைக்கான சீரியல்களில் ஒரு ஆணுக்கு இரு பெண்கள் போட்டி போட்டு சதி வலை பின்னும் பெண்களுக்கு மத்தியில் சவுந்தர்யா மாதிரி பெண்கள் இருந்தால்...இது ஓவர் சீன் என்றுதான் சொல்ல தோணுது.
முத்துச்செல்வி அழகா இருக்கணும்னு பியூட்டி பார்லருக்கு அழைச்சுட்டு போறது... அவளை வண்டியில அழைச்சுக்கிட்டு போயி நிறைய டிரஸ் வாங்கிக் குட்டு மாமான்னு அனுப்பி வச்சுட்டு முகத்தை ஏக்கமாவும், சோகமாவும் வச்சுக்கறது...
பொண்ணுங்களை படிக்க விடுங்கடா...தாலியோட எதுக்கு...?
சவுண்டு நடிப்பு எதுக்கு?
கண்ணன் மாமாவை மனசு முழுக்க வச்சுக்கிட்டு,ஒரு பெண்ணாலே இன்னொரு பெண்ணுக்கு விட்டுத் தரவே முடியாது.அப்படியே விட்டுக் கொடுத்தாலும் கண்டுக்கமா இருந்துடுவாங்க. இந்த சவுந்தர்யா முத்து செல்வியை தலையில தூக்கி வச்சு கொண்டாடாத குறைதான்... இதெல்லாம் கதையின் டூ மச்.
வீடு அரண்மனையா
என்னவோ பெரிய அரண்மனையில் வசிப்பது போல ஒருத்தர் மனசுல இருக்கறதை ஒருத்தர் தெரிஞ்சுக்க முடியாத மாதிரி நடந்துக்கறதும், விஜயலட்சுமி அம்மா கணவரிடம், கண்ணன் சவுந்தர்யா பற்றி பேசுவது கண்ணனின் காதில் ஒரு முறை இல்லாட்டியும் ஒரு முறையாவது எதேச்சையா விழாதா?
குறி சொல்லியும்
சாமியாடி குறி சொல்லியும் அக்கா சமாதானம் ஆகலையே என்னவா இருக்கும்.அக்கா உன் மனசுல என்னதான் இருக்குன்னு கண்ணன் வாய்விட்டு கேட்க மாட்டானா... நீ எதனால முத்து செல்வி வேணாம்னு சொல்றே..வேற யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறியான்னு வளர்த்த அக்காகிட்ட ஒரு தம்பி கேட்க மாட்டான்?
கதை கண்ணாமூச்சி
கண்மணி கதை கண்ணாமூச்சி விளையாட்டு கதை மாதிரி, எல்லோரும் கண்ணைக் கட்டிக்கிட்டு என்ன நடக்குதுன்னே தெரியாம ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கறாங்க அவ்ளோ பெரிய வீட்டில். பார்க்கற நமக்கும் கண்ணைக் கட்டிவிட்டுட்டா ரொம்ப நல்லாருக்கும்.