Kalyana Veedu Serial: திருமுருகன் எப்போதும் ஹஸ்கி வாய்சுல பேசறாரே.. ஏன்?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் திருமுருகன் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எப்போதும் ஹஸ்கி வாய்ஸிலேயே பேசி நடித்து வருகிறார் அதுதான் ஏன் என்று புரியவில்லை.
அழுதுகிட்டு நடிச்சாலும், சிரிச்சுக்கிட்டு நடிச்சாலும் இப்படித்தான் பேசுகிறார். சில சமயம் இது காட்சிக்கு உகந்ததாக இல்லை.
இவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தும், இதை திருமுருகன் உணராதது ஏன் என்று தெரியவில்லை.
எந்த தவறை
திருமுருகன் சீரியல் குறித்த எந்த தவறை சுட்டிக் காட்டினாலும் அதை சரி செய்து கொள்பவரல்ல.. இதுவும் ஏன் என்று இதுவரை தெரிந்துக் கொள்ள முடியாத புதிராகத்தான் இருக்கிறது. தவறை எடுத்து சொல்லும்போது திருத்திக் கொள்வது சிறந்த படைப்பாளிக்கு அழகுதானே..!
ஒரு முறை அல்ல
ஒரு முறை அல்ல இரு முறை ஸ்வேதா கணவரோடு சேர்ந்து வாழ துவங்கியாயிற்று. இனியும் அவர்களுக்குள் பிரிவு என்று வந்தால் நடுவில் கோபிக்கு இடம் இல்லை என்றுதானே அர்த்தம்? ஸ்வேதா மற்றும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரித்து விட்டால் மீண்டும் அங்கு கோபிக்கு இடம் என்பது போல கதையில் பேச்சு அடிபடுகிறது.
தவறான போக்கு
இது தவறான போக்கு.. சிந்தனைதானே.. இதை சுட்டிக்காட்டியும்.. அந்த போக்கில்தான் கதையை கொண்டு போகிறார். ஸ்வேதாவுடன் கோபி இருக்கும் போஸ்டரை இன்னும் கூட அகற்றவில்லை. எத்தனை தவறுதலான மனப்போக்கு சிந்தனை இது? இந்த தவறை சுட்டிக் காட்டினால் கூட திருத்திக் கொள்ள முயற்சிக்காமல் இருக்கிறார் திருமுருகன்.
சந்தகேத் தீ
ஸ்வேதா புருஷன் சந்தேகம் தீர்ந்து சந்தோஷமாக இருக்கிறான் என்று சுமுகமாக கதை போகும் சமயத்தில், கோபியுடன் இருக்கும் போட்டோவை மேலே இருந்து கண்டெடுக்கிறான் புருஷன். மீண்டும் சந்தேகத் தீ உருவாகிறது அவனுக்குள். இதெல்லாம் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.ஒரு பொண்ணு புருஷனோட சேர்ந்தும் அந்த போட்டோவை எப்படி பாதுகாத்து வச்சு இருப்பா?
கேட்டால் திருமுருகனிடம் இது போல ஆயிரம் கேள்வி கேட்கலாம்...!