ஆறரை மணிக்கெல்லாம் என்னால முடியாதுங்க... அட என்ன இப்படி பண்ணிட்டீங்கம்மணி!
சென்னை: ஆறரை மணிக்குன்னா என்னால முடியாதுங்கன்னு சொல்லிட்டு நடிகை வந்துட்டாரே தவிர, அடுத்தது என்ன, எப்படி, எங்கேன்னு பல கேள்விகள் அவங்களை உள்ளே இருந்து வாட்டுதாம்.
எவ்ளோதான் பணம் கொட்டி கிடந்தாலும் சீரியலை பணக்கார குடும்பமா காமிப்பாங்க.. பார்த்தா அவங்க அலுவலகமே வீடாவும் இருக்கும், கம்பெனியாவும் இருக்கும், ஆஸ்பத்திரியாவும் இருக்கும்னா பாருங்களேன்.
இந்த நிலையில, இவங்களோட சீரியல் மார்க்கெட் தெலுங்குல நல்ல இடத்துல இருந்து வந்துச்சாம். தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம்னு ஓஹோன்னு சீரியல் ராணியா கொடிகட்டிப் பறந்தவங்க.
படையெடுத்து நிற்கும் பலங்கள். சம்பந்தமே இல்லாமல் கோதாவில் இறக்கி விடப்பட்ட இளங்கோவன் தடதடக்கும் தேனி
எங்க போச்சு?
இப்போ பணமெல்லாம் எங்க போச்சுன்னு கேட்கற அளவுக்கு அந்த சீரியல் நடிகைக்கு நிலைமை இருக்குதாம், நிறுவன கணக்கைத்தான் இப்படி காட்றாங்க.. மத்த பணமெல்லாம் அப்படியேதான் இருக்குன்னும் பேசிக்கறாங்களாம்.
மொழியாச்சே
நாலு மொழியில சீரியல் நடிகை ஹிட் குடுத்ததால பிரபல டிவி நிறுவனம் ஒரு சீரியல் எபிசோடுக்கு இவ்வளவுன்னு மானியத் தொகை வேற குடுத்துச்சாம். அதையும் செலவு செய்யாம மிச்சம் புடிச்சி இருக்காங்க மேடம். சேனல்காரங்க சும்மா விடுவாங்களா. மானியத்தை கட் பண்ணிட்டாங்க.
இது பாவம்..
அதை விடுங்க.. பணக்காரங்க சமாளிச்சுப்பாங்க. சீரியல் ஆரம்பிச்சு 6 மாசத்துக்கு மேல் ஆச்சாம் ஒருத்தருக்கும் இன்னும் ஒரு பைசா சம்பளம் தரலையாம். ஒரு மனுஷன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லேண்ணு, இன்னொருத்தர் பசங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாத்திட்டேன்னும் கண்ணீரோட சொல்றாரு.
நம்பாம இருக்க முடியுமா?
பால் வாங்க காசு இல்லே
ஒரு மனுஷன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லேண்ணு, இன்னொருத்தர் பசங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாத்திட்டேன்னும் கண்ணீரோட சொல்றாரு.