Kalyana Veedu Serial: குடும்ப கதையில திகிலை கொஞ்சம் குறைச்சுக்கலாமே திருமுருகன்...!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் கதை குடும்ப கதை என்று நம்பி இருந்த சமயத்தில், குடும்பத்தில் காண்பிக்க கூடாத திகிலை எல்லாம் காண்பிச்சு திகில் கதை மாதிரி ஆக்கிட்டாங்க.
பொங்கலுக்குப் பிறகு கல்யாண வீடு சீரியலின் ப்ரோமோவே ஏகப்பட்ட திகிலை கிளம்புவதாக இருந்தது.
அதன் பிறகான எபிசோடும் அப்படித்தான் இருக்கிறது.
திக் திக் காட்சிகள்
கல்யாண வீடு குடும்ப சீரியல்தான் என்றாலும் எபிசோட் காட்சிகளில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்கிற திகில்தான் மனசுக்குள்ள திக் திக்னு அடிச்சுக்குது. பாவம் சீரியல் பார்க்கும் குடும்ப பெண்கள். கலா அண்ட் சிஸ்டர் என்ன பேசுவங்களோ... இப்படியும் பேசுவங்களான்னு காதை கூட பொத்திக்கறாங்க.
ஸ்வேதா புருஷன்
ஸ்வேதா புருஷன் ஓவர் நைட்டுல கொடிய சந்தேக வியாதிக்கு ஆளாகிடறான் என்று திருமுருகன் வாய்ஸ் ஓவரில் சொல்றார்.ஏங்க முதல் நாள் போட்டோ பார்க்கிறார். மறுநாள் கொடிய சந்தேக வியாதிக்கு ஆளாகிடறாராம். அதாவது முதல் நாள் பாப்பாவுக்கு பிறந்தநாள் டிரஸ் எடுக்க போறாங்க. மறுநாள் பிறந்த நாள் கொண்டாடுவதற்குள் கொடிய சந்தேக நோய்க்கு ஆளாகிடறார் என்று சொல்றாங்க.
ரியல் கேரக்டர்
திருமுருகன் எப்போதும் அங்கு கிடைக்கும் ரியல் கேரக்டர்களை எடுத்துக் கொண்டு கதை அமைப்பார் என்று சொல்வார்கள். அதற்காக இப்படிப்பட்ட பூதக் கண்ணாடி வைத்து பார்க்கும் கேரக்டர்களை காண்பிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இதை எல்லாம் மக்கள் தெரிந்துக்கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடுமா என்ன?
பெண் வசனகர்த்தா
இந்த சீரியலின் வசனகர்த்தா ஒரு பெண் என்று சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் அறிவித்து அவருக்கு விருதும் வழங்கினார்கள். மிக்க மகிழ்ச்சி. அவர் கலா அன்ட் சிஸ்டருக்கு வசனம் எழுதும்போது கொஞ்சம் பார்த்து எழுதினால் பெண்கள் சமூகம் அவருக்கு நண்றிக்கடன் பட்டு இருக்கும்.