என்னாங்க செம்பாவை இந்த பாடு படுத்தறீங்க... நம்பிக்கை வேணாமா...!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் செம்பா கார்த்திக் ரெண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல், பெரிய இடைவெளியாகிட்டு வருது.
சீரியல் விரும்பிங்க எல்லாருமே அச்சச்சோ.. செம்பாவுக்கு இத்தனை கஷ்டமா.. இப்படி படுத்தறாங்களேன்னு உச்சு கொட்டிக்கிட்டுத்தான் சீரியல் பார்க்கறாங்க.
செம்பாவின் நாத்தனார் வினோதினி வீட்டை விட்டு ஓடிப்போயிட்டா...இதுக்கு பாதி ராத்திரியில கேட் தொறந்து இருக்கேன்னு பூட்ட போன செம்பாதான் வினோதினிக்கு கதவை திறந்து விட்டிருப்பான்னு புருஷன் கார்த்திக் உட்பட வீட்டுல எல்லாரும் செம்பாவை குத்தம் சொல்றாங்க.
செம்பாவும் இல்லை, என்னை நம்புங்கன்னு சொல்றாளே தவிர வேறு ஒன்னும் பேச முடியாதபடி அவ வாயை அடைக்கறாங்களா.. இல்லை பம்மி பம்மி வாழ்ந்து பழக்கப்பட்டுட்ட அவளால எதிர்த்து பேச முடியலையா தெரியல...
கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்ய போனாலும், பொய் சாத்தியம் பண்ண போறியா.. குடும்பத்துக்கே ஆகாதுன்னு சொல்லி, சத்தியம் செய்யவும் விட மாட்டேன்றாங்க.
குடும்பமே கூடி பிஸிபேளா பாத் சமைக்கறாங்க.. யாருக்கு?
காலில் விழுந்து அழுதாலும் நம்பலை.. பாவம் ஏழைப் பொண்ணா இந்த வீட்டுக்கு வேலைக்காரியா வந்தவ வேற என்னதான் செய்ய முடியும். இன்னும் என்னை நீங்க நம்பலைன்னா நான் தீக்குளிச்சுதான் நிரூபிக்கணும்னு சொல்றா செம்பா.
அவசியம் ஏற்பட்டா அதையும் செய்ய தயாரா இருக்கணும் செம்பான்னு சொல்லிட்டு போறான் புருஷன்.. பாவம்.. அவன் ஸ்ரீ ராமன் பாருங்க..இதுல ஒரு கூத்தை பாருங்க ஓடிப்போன ஜோடி, கல்யாண புடவை, தாலின்னு சந்தோஷமா பர்ச்சேஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. என்னத்த சொல்றது...