For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழினி அம்மா நாகப்பன் ஐயாவை மிஞ்சிருவாங்க போலிருக்கே...வியப்பில் வேலைக்காரன்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் வன்முறைக்கும், மென் முறைக்குமான சீரியல்னு சொல்லலாம். இரண்டையும் இதில் பார்க்க முடியுது.

நாகப்பனுக்கு இரண்டு மகள்கள்... பெரியவள் யாழினி படிச்சு முடிச்சுட்டு வீட்டிலிருப்பவள். சின்ன மகள் படிப்புக்காக வெளியூர் போயிருக்கிறாள்.

நாகப்பன் அப்பாவின் செயல்பாடுகள் தவறானதோ என்று அஞ்சும் மகள் சிறியவள்.அப்பாவின் செயல் எல்லாருக்கும் நல்லது செய்வதாகவே இருக்கும் என்று நம்புபவள் பெரிய மகள் யாழினி.

பவுர்ணமிக்குத்தான் அப்பான்னா பயம்... ராம்கிக்கு என்னா உடைச்சு பேசலாமே...! பவுர்ணமிக்குத்தான் அப்பான்னா பயம்... ராம்கிக்கு என்னா உடைச்சு பேசலாமே...!

தேவராஜ் யாழினி

தேவராஜ் யாழினி

யாழினி எதிரியின் குகைக்குள் சென்று எதிரியை சந்திப்பது போல தேவராஜ் வீட்டுக்கே சென்று ,நீங்கள் செய்வது ரொம்பத் தப்பான வேலை அங்கிள்.நான் வரும்போது மகாலட்சுமி மாதிரி இருக்கறதா சொன்னீங்க...நல்லவங்க கண்ணுக்குத்தான் நான் மகாலட்சுமி.உங்களை மாதிரி எங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு கெடுதல் செய்ப்பவர்கள் கண்களுக்கு நான் மகிஷா சுர மர்த்தினி.என்று கூறுகிறாள்.

தேவராஜ் மவுனம்

தேவராஜ் மவுனம்

உங்களாலே எத்தனை பெண்கள் விதவையா ஆகி இருக்காங்க தெரியுமா...என் அம்மா உங்களை சாபம் விட்டாங்க...நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கன்னு .பெண்களை மதிக்கறவங்க என் அப்பா. படகுப் போட்டியில நேர்மையா விளையாடி தன்னை நம்பி இருக்கும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு .அப்பா நினைச்சார்...இப்படி யாழினி பேச பேச தேவராஜ் மவுனமாக இருக்கார்.

உண்மையா ஜெயிக்கலை

உண்மையா ஜெயிக்கலை

நீங்க அடாவடி வின்னர் அங்கிள்...உண்மையா படகுப் போட்டியில ஜெயிக்கலை... ஆனா அப்பா இதை பெரிசா எடுத்துக்காம தன்னை நம்பி இருக்கும் ஜனங்களை காப்பாத்த எல்லாப் படகுகளையும் விற்க முடிவு செய்திருக்கார். இனிமேலாவது திருந்தி வாழப் பாருங்கன்னு சொல்லிட்டு கிளம்பறா...

தேவராஜை சந்திச்சு பேசினது

தேவராஜை சந்திச்சு பேசினது

வீட்டு வாசலில் நின்ற வேலைக்காரனிடம்... நான் தேவராஜ் அங்கிள் வீட்டுக்கு போனது அப்பா, அம்மாவுக்கு தெரியவே கூடாது.அப்படி தெரிஞ்சுது... நீ இந்த இடத்தில் இனிமே நிக்க முடியாது.என்னை பத்தி போகப் போக புரிஞ்சுக்குவேன்னு சொல்லிட்டு ராஜ நடை நடந்து வர்றா.ஐயோ...யாழினி அம்மா நாகப்பன் அய்யாவை மிஞ்சிருவாங்க போலிருக்கேன்னு சொல்லிக்கறான்.

மனசு சரியில்லை தேவராஜுக்கு

மனசு சரியில்லை தேவராஜுக்கு

யாழினி வந்து பேசிட்டு போன பிறகு தேவராஜுக்கு மனசு சரியில்லாம உட்கார்ந்து இருக்கார்.என்னங்க அந்த பொண்ணு வந்து பேசிட்டு போனதில் இருந்து இப்படி இடிஞ்சு போயி உட்கார்ந்து இருக்கீங்கன்னு மனைவி கேட்கறாங்க. மாமா என்னாச்சு மாமான்னு தங்கை மகள் கேட்கிறாள். ஒன்னும் பேசாம அமைதியா உட்கார்ந்து இருக்கார்,

English summary
Sun TV's kizhakku vasal serial can be said to serials for violence and softness. It can be seen both.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X