Sembaruthi serial: ஆதியை காண்பிச்சே காலத்தை ஓட்டறீங்களே!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதியா நடிச்சுக்கிட்டுஇருக்கும் நடிகர் கார்த்திக், ரொம்ப சீன்களில் சமீப காலமா வர்றதில்லையாம்.
தொடர்ந்து அந்த சீரியலைப் பார்த்து வரும் இளம் பெண்களின் குற்றச்சாட்டு இது. இவங்க அந்த சீரியலை பார்க்க முதல் முக்கிய காரணம் நடிகர் கார்த்திக் தான்.
கிராமங்களில் இளம் பெண்களில் ஆரம்பிச்சு நடுத்தர வயது பெண்கள் வரை கார்த்திக்குக்கு ரசிகைகள் இருக்காங்க.
சீரியல் ஆரம்பத்தில்
செம்பருத்தி சீரியல் ஆரம்பித்த புதிதில் பார்வதி, ஆதிக்கு முழுக்க முழுக்க காதல், ரொமான்ஸ் சீன்ஸ் அதிகம் என்று வைத்து ரசிகர்களை கவர்ந்து விட்ட ஜீ தமிழ் டிவி, இப்போது கார்த்திக் ரசிகைகளை ஏமாற்றி வருவதாக கூட ஒரு புகார் எழுந்துள்ளது.
சீரியல் நடிகர் கார்த்திக்
கிராமப் புறங்களில் சீரியல் நடிகர் கார்த்திக்குக்கு நிறைய பெண் ரசிகைகள் உண்டு. இவர்களை மனதில் கொண்டு சீரியலை ஆரம்பித்த ஜீ தமிழ் டிவி, ஆரம்பத்தில் அதாவது கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கார்த்திக்கும், பார்வதியும் செய்யும் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை வச்சு ரேட்டிங் காண்பிச்சு வந்ததாக கூறுகிறார்கள்.
ரொம்ப பிகு
இப்போது நடிகர் கார்த்திக் கூட தன்னால்தான் ரேட்டிங் வந்தது என்று, ஒரு நாளைக்கு அதிகம் சம்பளம் கேட்டு பிகு செய்து கொள்கிறாராம். அதனால்தான், சீரியல் தயாரிப்பாளர்கள், கார்த்திக் வரும் காட்சிகளை கணிசமாக கூட இல்லாமல் ஏகத்துக்கும் அதிகரிச்சு சீரியலை ஷூட் செய்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.
ஏமாற்றத்தில் ரசிகைகள்
இந்த நிலையில் அபிமான நடிகரை சீரியலில் காணாமல் ஏமாற்றத்தில் இருக்கும் கிராமத்து ரசிகைகள், தங்களது வீட்டில் கார்த்திக்கின் போட்டோவை பிரேம் செய்து சுவற்றில் தொங்கவிட்டு பார்த்துக் கொள்கிறார்களாம்.என்ன கொடுமை சரவணா இது?
இந்த ரசிகைளுக்கு என்ன பதில் சொல்ல போகிறது ஜீ தமிழ் டிவி?