ஆஹா மருமகள்...ஓஹோ அத்தை...இத..இதத்தான் எல்லா குடும்பமும்!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ஒரு வருட ஒப்பந்த கல்யாணம்தான் ரோஜாவும், அர்ஜுனும் செய்துகிட்டதுன்னு அர்ஜுன் அம்மா கல்பனாவுக்கு தெரிஞ்சுருது.
கோபமான கல்பனா, ரோஜாவை என் முகத்துல முழிக்காதேன்னு சொல்லிடறாங்க.இனிமே இந்த வீட்ல இருக்கக் கூடாதுன்னு சொல்லிஅத்தைக்கு லெட்டர் எழுதி வச்சுட்டு வீட்டை விட்டு கிளம்பிடறா.
அர்ஜுன் ரோஜா இல்லாமல் தவிச்சு போறான்.இனி வீட்டுக்கு வந்தா ரோஜாவோடதான் வருவேன்னு, அர்ஜுன் கிளம்பி போறான். ரோஜாவையும் பார்த்துடறான். லாரியில் அடிபடஇருந்த ரோஜாவை காப்பாத்தி தான் விபத்தில் சிக்கிக்கறான்.
ரோஜாதான் ஆஸ்பத்திரில அட்மிட் பண்றா.யாரும் இல்லாதப்போ, மயக்கத்தில் இருக்கும் அர்ஜுனை பார்த்து அழறது,பேசறதுன்னு இருக்கா.ஒரு கட்டத்தில் கண் விழிச்ச அர்ஜுன், ரோஜாவைப் பார்க்காம சாப்பிட மாட்டேன்னு அடம் புடிக்கறான்.
விடுவிடுன்னு கல்பனா போறாங்க, அங்க மறைஞ்சு நிக்கும் ரோஜாவின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை. நீ மறைஞ்சு நின்னு அர்ஜுனைப் பார்க்கறது, அவனுக்காக கோயிலில் பூ மிதிச்சது, குங்குமம் வச்சுவிட்டது எல்லாம் எனக்கு தெரியும் ரோஜா..
என் அத்தை என்னை மருமகளே மருமகளேன்னு வாய் நிறைய கூப்பிடுவாங்க..இப்போ நான் உன்னை கூப்பிடுறேன்...நீதான் எனக்கு மருமகள்னு சொல்லிட்டு,அர்ஜுன் கிட்ட அழைச்சுட்டு போயி, இனி நீயாச்சு, அவனாச்சு..அவனை ஒழுங்கா .சாப்பிட வைன்னு சொல்லிட்டு போயிடறாங்க..
போயிட்டு கதறி அழறாங்க...இனிமே என் பையன் அழறதை பார்க்கற சக்தி எனக்கு இல்லை.இனி என்ன ஆனாலும் அவனை விட்டு நீ போக கூடடதுன்னு அழறாங்க.இல்லை அத்தை இனிமே அவரை விட்டு எங்கும் போகமாட்டேன்னு ரோஜா அழ, இருவரும் கட்டிக்கறாங்க
இப்படி அத்தையும், மருமகளும் இருந்தா நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளேன்னு எம்ஜிஆர் பாடினது உண்மையாகிரும். எல்லா குடும்பமும் சூப்பர் குடும்பமா இருக்கும்.
அனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு?