ஆமாம்.. ஆறிப்போன பால் இப்போ எப்படி சூடாச்சு?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் வினோதினியையும், ஹரீஷையும் செம்பாவும், கார்த்திக்கும் சேர்ந்து ஒரு வழியா காட்டேஜ்க்கு அனுப்பி வச்சுடறாங்க.
இங்கே அவங்க ரெண்டு பேர் முதலிரவுக்கு அலங்காரம் செய்து வச்சிருந்ததை என்ன செய்யலாம்னு யாரும் யோசிக்கலை.அதுக்குதான் செம்பாவும், கார்த்திக்கும் இருக்காங்களே...
அலங்காரம் செய்த ரூமில் சின்னையா இருக்க பால் கொண்டு போறா செம்பா.அவன் கதவுக்கு பின்னால ஒளிஞ்சுக்கறான். சின்னய்யா சின்னய்யான்னு கூப்பிட்டு பார்த்துட்டு,இந்தப் பாலைக் குடிக்க சின்னய்யாவுக்கு குடுத்து வைக்கலை.
நாம குடிச்சுட்டு,இங்கேயே தூங்கிருவோம்... சின்னய்யா பாவம் நம்ம ரூம்ல அசந்து தூங்கி இருப்பாருன்னு சொல்றா. செம்பான்னு கூப்பிட்டு கிட்ட வர்றான் கார்த்திக்.நீங்க ஒளிஞ்சு இருந்ததை நான் பார்த்துட்டேன்னு சொல்றா.
நீ பார்த்ததையும் நான் பார்த்துட்டேன்னு இவன் சொல்றான். சின்னய்யா..அலங்காரம் பண்ணினது அப்படியே இருக்கட்டும். நாளைக்கு வினோதினியும், ஹரீஷும் வந்துருவாங்களேன்னு சொல்றா.
நிலாவும் நீலாம்பரியும் சவால் விட்டுக்கறாங்களே...!
எதையும் பழசாக்கி புதுக் தம்பதிக்கு குடுக்க கூடாது செம்பா.. இன்னிக்கு நம்ம யூஸ் பண்ணிக்குவோம். நாளைக்கு அவங்களுக்கு புதுசா அலங்காரம் பண்ணிக்குவோம்னு சொல்றான். முதல்ல பாலைக்குடு குடிக்கலாம்னு சொல்றான்.
சின்னய்யா ஆறிப்போச்சு..இருங்க சூடு பண்ணி எடுத்துட்டு வர்றேன்னு சொல்றா. என் கையில பாலை குடு செம்பான்னு வாங்கி கொஞ்ச நேரம் கையில வச்சிருக்கான். இப்போ பாருன்னு சொல்ல, பால் ரொம்ப சூடா இருக்கு சின்னய்யான்னு சொல்றா.
மாமன் ரொம்ப சூடா இருக்கேன்லன்னு சொல்லிட்டு, பாலை குடிச்சுட்டு செம்பாவுக்கு தர்றான்.இருவரும் பாலை குடிக்க, அவன் செம்பாவை நெருங்க.. சின்னய்யா..மாவு எடுத்து வைக்கலை, கதவை சாத்தலை..வந்துடறேன் இருங்கன்னு ஓடறா.
வினோதினிதான் இல்லையே..அவ ரூமுக்குள்ள என்ன சத்தம்னு பார்க்க கார்த்திக்கின் அண்ணன் வர அவனை செம்பான்னு நினைச்சு தூக்கிக்கறான். அவன் தெறிச்சு ஓட, பின்னால் வந்த செம்பா சிரிக்கறா.. சிரிக்காதடீன்னு அவளை கட்டிக்கறான் கார்த்திக்.