Kanmani serial: குழந்தை பொறக்காதுன்னு உடனே சொல்லியாகணுமா சின்னவரே...?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கு ஒரு விபத்தில் வயிற்றில் இருந்த குழந்தை அழிந்து விடுகிறது.
அது மட்டும் இல்லாமல் இனி குழந்தையே பிறக்காது என்று டாக்டர் சொல்லிடறாங்க. அதை உடனடியா சின்னவரும் சவுந்தர்யாவிடம் சொல்லிடறார்.
உடனே சொல்லிடணும்னு என்ன அவசியம்னு தெரியலை. கொஞ்சம் பொறுத்து சொல்லக் கூடாதா சின்னவரே...?
தியாக குணம்
சவுந்தர்யா ஏற்கனவே தியாக குணம் கொண்டவள். மாமன் கண்ணன் மீது கொள்ளை ஆசை இருந்தாலும், முத்துச்செல்விக்கு விட்டுக் கொடுக்க இருந்த நேரத்தில்தான். முத்துச்செல்வி தானாக புரிந்துக் கொண்டு சின்னவரை சவுந்தர்யா அம்மாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
முத்துச்செல்வி இன்னும்
இன்னும் முத்துச்செல்வி சின்னவர் நினைவிலேயே வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாள். ஒரு நாள் கனவில் சின்னவரின் குழந்தையை பெற்று எடுப்பது போல கனவு வேறு காண்கிறாள் இந்த சமயத்தில்தான் சவுந்தர்யாவுக்கு இனி குழந்தை பிறக்காது என்று டாக்டர் சொல்றாங்க.
பிறக்க வாய்ப்பில்லை
டாக்டர் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொன்னதை அறியாத சவுந்தர்யா முருகன் கோயிலுக்கு போக வேண்டும் என்றுதான் மாமன் கண்ணனிடம் கேட்கிறாள். இதற்கு ஏன் அவசரப்பட்டு கண்ணன் சவுந்தர்யாவிடம் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் சொன்னதை உடனடியாக கூற வேண்டும் என்று பார்த்தால் கதைக்காகத்தான்.
சவுந்தர்யா முத்துச்செல்வி
தியாக குணம் கொண்ட சவுந்தர்யா வீட்டை விட்டு போவாள். அப்போது அவள் கண்களில் முத்துச்செல்வி தென்படுவாள். சவுந்தர்யா முத்துச்செல்வியையும், கண்னனையும் ஒன்று சேர்த்து வைத்து அழகு பார்ப்பாள்... அவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
என்னங்க.. எத்தனை தமிழ் படம் பார்த்துட்டோம்.. என்னங்க சின்னவரே நீங்க..
சரக்கு இல்லையா தெரிஞ்ச மாதிரியே கதையை கொண்டு போறீங்களே....