அக்காவுக்கு காதலன் தந்த கிஃப்டை தங்கச்சி போட்டு உடைச்சுட்டாளே...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவுக்கு காதலன் இருக்கான்னு தெரிஞ்சும், நிலாவை தன் மகன் சஞ்சய்க்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கறாங்க.
மகன் சஞ்சயும் அம்மா மாதிரியே நிலாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..சோ, எனக்குத்தான் அதிர்ஷ்டம் இருக்கு பிரதர்..நீங்க வேணா அடுத்த ஜென்மத்துல ட்ரை பண்ணுங்கன்னு சொல்லிட்டு, நிலா டார்லிங் வான்னு தோளில் கை போட்டு கார்ல அழைச்சுக்கிட்டு வந்துடறான்.
நிலாவுக்கு, நீலாம்பரி ஆன்ட்டி இதெல்லாம் டிராமான்னுதானே சொன்னாங்க.. அவங்க பையன் என்னடான்னா, ரொம்ப உரிமை எடுத்துக்கறானேன்னு குழப்பம்.
ஒரு சிறுவனும், சிறுமியும் இருப்பது போல மண் பொம்மை பரிசாக வாங்கித் தர்றான்.மறுக்க முடியாம வாங்கிக்கறா நிலா. வீட்டிலேயே கொண்டு வந்து சஞ்சய் இறக்கிவிட, இது சஞ்சய் கார் மாதிரி இருக்கேன்னு ஆசையா ஒடி வர்றா ஸ்வேதா.
நிலாவும் காரில் வந்து இறங்க நிலாவின் அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். இதுக்கெல்லாம் சொந்தக்காரி நான்தாண்டி...சஞ்சய் பணத்துக்காக அம்மாகிட்ட டிராமா போடறான்..அது புரியாத மக்குன்னு சொல்லிக்கறா ஸ்வேதா.
இது என்ன நிலா கிஃப்ட்டுன்னு அம்மா ஆசையா கேட்கறாங்க. அவர் வாங்கித் தந்தார்மான்னு நிலா சொல்ல, அம்மா பிரிச்சு பார்க்கறாங்க. இவ்ளோ அழகா இருக்கே...மாப்பிள்ளை நிலா மேல ஆசையா இருக்கார்.. இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு அம்மா சொல்றாங்க.
நிலா, ரூம் வரைக்கும் போயிட்டு வரேன்மான்னு கிளம்பி விட, நிலாவுக்கு சஞ்சய் குடுத்த கிஃப்டை அப்படியே போட்டு உடைக்கறா ஸ்வேதா. அம்மா மாப்பிள்ளை வாங்கித் தந்த முதல் பரிசை இப்படி உடைச்சுட்டியேடி.. நிலா என்ன சொல்லுவாளோ, நீலாம்பரி என்ன சொல்லுவாங்களோனு கவலையில இருக்காங்க.