Youtube Channel: ஆஹா சானல்.. இப்படி உருப்படியா பேசினா நல்லா கேக்கலாமே!
Recommended Video
சென்னை: நல்லதை தேடித் தேடி பார்க்கும் போதுதான் அதன் அருமை பெருமைகள் நமக்கே புரிகிறது.அதுக்குத்தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாதே என்று அப்போதே சொல்லி வைத்தார்கள்.
இப்போது குண்டு சட்டி என்ன.ஒரு சின்ன கையடக்க செல்போனில் உலகத்தையே தெரிஞ்சுக்கலாம். ஆனால், அதில் தேடல் நல்லவைகளாக இருக்க வேண்டும்.
யூடியூப் சேனல்களில் இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பார்வையாளர்களும் விரும்பிப் பார்த்து அதிக வியூஸ் கொண்ட நிறைய யூடியூப் சானல்கள் புகழில் கோலோச்சி சம்பாதித்து தருகின்றன.
யூடியூப் சேனல்
தேநீர் இடைவேளை என்று ஒரு யூடியூப் சேனல். இதில் ஓர் இளைஞர் சந்தகேத்தை கேட்பவராகவும் இருக்கிறார், அதைத் தீர்த்து வைப்பவராகவும் இருக்கிறார். நிறைய இன்ஃபர்மேட்டிவான விஷயங்களை சொல்கிறார். பல விஷயங்கள் நமக்கே தெரியாதவைகள். எதையும் தெரிஞ்சுக்கறது நல்லதுதானே!
Eeramana rojave serial: என்ன இப்படி சண்டை போட்டுக்கறாங்க? தப்பாப் போச்சே!
இவ்வளவு விலையா இளநீர்
இளநீர் .வாங்க வந்த அந்த இளைஞர், விலையைக் கேட்டு இவ்வளவா என்று கூறிவிட்டு வாங்காமல் போக நினைக்கிறார். தாய்ப்பாலில் இருக்கற புரதச்சத்து இருக்குன்னு கடைக்காரர் சொல்ல, என்னது தாய்ப்பாலில் இருக்கற புரதச் சத்து இருக்கான்னு அந்த இளைஞர் திரும்பி வந்துவிடுகிறார். இன்னும் சொல்றேன் கேளுன்னு அந்த இளைஞர் இளநீரின் அருமை பெருமைகளை பட்டியல் இடுகிறார்.
பெயர் காரணம்
அண்ணே சொல்றேன் கேளுன்னு ஒரு தென்னை மரத்துல பூ பூத்து காய் வச்சு பறிக்க ஒரு வருஷம் ஆகும். ஆனால், 7 .லிருந்து 8 மாசம் வரையான காய்கள் இளம் தேங்காய் உள்ள இருக்கும் நீர். அதுதான் மருவி இளநீர்னு மாறிப் போச்சு. இதில் தாய்ப்பாலில் இணையான புரத்தசத்து இருக்கு. அதோட இளநீரை ரத்தத்தின் தோஸ்த்னு சொல்வாங்க.ஏன்னா இதில் இருக்கும் நல்ல கொழுப்பு ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை வெளியேற்றி ரத்த சுத்திகரிப்பு செய்யும்.
மூளைக்கு சுறுசுறுப்பு
இளநீர் குளிர்ச்சி சூட்டைத் தணிக்கும், மூளைக்கு சுறுசுறுப்பு கொடுக்கும். அம்மை போட்டவங்களுக்கு இளநீர் சரியான மருத்துவம் கொடுக்கும். ரத்த சோகை இருக்கறவங்க இளநீர் குடித்தால் ரத்த சோகை போயி. ஞாபக சக்தி அதிகரிக்கும். உடம்புக்குத் தேவையான கால்ஷியம் இளநீரில் குவிஞ்சு கிடக்கு. குழந்தைகளுக்கு சூட்டு கட்டி வந்தால் இளநீர் குடுத்தால் சரியாகும்.
கடைசியா இளைஞர் இளம் பெண்கள் இளநீர் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும்..பரு வராதுன்னா பாருங்களேன். இவ்ளோ மகத்துவத்தை கொண்ட இளநீர் பத்தி நான் பேசாம யார் பேசுவான்னு கேட்கிறார் இவர்.