பாட்டிக்கு வயசு 75 .. ஏற்கனவே ஞாபக மறதி நோயால் அவதி.. அவரை போய் பலாத்காரம் செய்த காமுகன்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது. ஞாபக மறதி நோயால் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் 75 வயசு பாட்டியை ஒரு மூர்க்கன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டான். அவனைப் பிடிக்க தற்போது போலீஸார் வலை வீசியுள்ளனர்.
கொலஞ்சேரி என்ற ஊரில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அந்தப் பாட்டிக்கு ரொம்ப நாளாகவே ஞாபக மறதி நோய் இருக்கிறது. பல விஷயங்கள் அவருக்கு நினைவில் இல்லை. பாங்கோடு என்ற ஊரில் இன்னொருவரின் வீட்டில்தான் தங்கியிருந்தார். அப்போதுதான் அவரது நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு காமக் கொடூரன், இவரைப் பாட்டி என்றும் பாராமல், வயதையும் கண்டுக்காமல் அசிங்கமாக நடந்து கொண்டுள்ளான்.
தான் பாலியல் பலாத்காரம் செய்தது மட்டும் இவருக்கு நினைவிருக்கிறது. ஆனால் ஆள் யார் என்பதை இவரால் சொல்ல முடியவில்லை. உடம்பும் சரியில்லை. மோசமான நிலையில் இருந்த இவரை தற்போது மீட்டு கொச்சி யில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மைதான் என்று தெரிவித்துள்ளனர்.
அன்று மைக் பிடித்தார்.. இன்று அடிக்கல் நாட்டுகிறார்.. ராமர் கோவிலும்.. மோடியின் 30 வருட சபதமும்!
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . அவரை இந்த கதிக்குள்ளாக்கிய கொடுமைக்காரனைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர். பாட்டியிடமிருந்து போதிய தகவல் கிடைக்கவில்லை. அவரது உடல் நிலையும் மோசமாக உள்ளதாம். இதனால்அவரிடம் அதிகமாக பேசவும் முடியவில்லையாம்.
இப்படிப்பட்ட நிலை இருந்தாலும் கூட போலீஸார் அந்தக் காமுக நபரைப் பிடிக்க உறுதியுடன் நடவடிக்கையில் குதித்துள்ளனராம். என்னதான் கொரோனா வந்து உயிர் பயத்தைக் கொடுத்தாலும் காமவெறியர்கள் அதையெல்லாம் 60