திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீதேவியின் மரணம் வெளியுறவுத் துறை சந்தேகம்!

    திருவனந்தபுரம்: துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

    கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார்.

    Actress Sridevi death not accidential,says Kerala DGP

    உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

    ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

    ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் அவரது மரணம் நிச்சயம் விபத்து அல்ல என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார்.

    Actress Sridevi death not accidential,says Kerala DGP

    ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.

    அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என்பதும் உமாடாதனின் கருத்து. இவ்வாறு டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.

    English summary
    Kerala DGP Rishiraj Singh has said that the bollywood actress sridevi noth accidential.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X