வயநாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு.. பச்சிளம் குழந்தையையும் விடவில்லை.. பத்திரமாக மீட்ட ராணுவம்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிலிருந்து பச்சிளம் குழந்தையை ராணுவ வீரர்கள் மீட்டனர்.
தென்மேற்கு பருவமழை படுதீவிரம் அடைந்துள்ளது. இதனால் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின.
இந்த மழையின் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. கோவை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
Army personnel have rescued a new born baby, from flood hit Wayanad. #KeralaFloods pic.twitter.com/VAlV31E9xq
— ANI (@ANI) August 10, 2019
கேரளத்தில் தொடர்ந்து 3 நாட்களாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோரின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த நிலையில் ராணுவத்தினர் அங்கு தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் உள்ள மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
Army personnel continue rescue operations in flood hit Wayanad. #KeralaFloods pic.twitter.com/apvTyKAoxN
— ANI (@ANI) August 10, 2019
வயநாட்டில் புதிதாக பிறந்த குழந்தையை வெள்ள பாதிப்பிலிருந்து ராணுவத்தினர் மீட்டனர். அது போல் முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என அனைவரையும் தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.