ஊடகப் பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்... கேரளாவில் களேபரம்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் முழு அடைப்பின் போது நடைபெற்ற போராட்டத்தை படம் பிடித்த ஊடகப் பெண் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சங்க் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் கேரளாவில் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தை செய்தியாக்கும் பணியில் பிரபல தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் ஒளிப்பதிவாளர் ஷாஜிலா அப்துல்ரஹ்மான் ஈடுபட்டிருந்தார். இதில், போராட்டக்கார்களில் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தி கேமிராவை பறிக்க முயன்றனர். பிறகு தாக்குதல் நடத்தி தகாத வார்த்தைகளில் கடுமையாக பேசினர்.
எனினும், ஷாஜிலா பணியை தொடர்ந்து கொண்டு இருந்தார். அழுகையுடன் பணியில் அவர் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தாக்குதலில் கழுத்துப் பகுதியில் காயமடைந்த ஷாஜிலா, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.